செய்திகள் :

`தூக்கு தண்டணையா... ஆயுள் தண்டணையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

post image

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, நீதிபதி முத்துகுமரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 23 ஆம் தேதி 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்ததோடு, அவர்களின் மனநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, தீர்ப்பு விவரங்கள் மார்ச் 30-ம் தேதி வெளியாகும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, "மத்திய, மாநில அரசின் அறிக்கை என்ன ஆனது. சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது. எந்தக் கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாகப் பதிவுசெய்யுங்கள். சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது" என்றார்.

சாத்தன்குளம் வழக்கு

அதற்கு, '2 நாள்கள் அவகாசம் கொடுங்கள்' - சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதைக் கேட்ட நீதிபதி காட்டமான தொனியில், ``கடந்த 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யக் கூறியும், ஏன் அறிக்கை தாக்கல் செய்யபடவில்லை. 9 பேருக்கு தூக்குத் தண்டனையா ஆயுள் தண்டனையா என நான் முடிவெடுக்க வேண்டும்... அதற்காகவே அறிக்கை கேட்கிறேன்.

என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கேட்கிறேன்" எனச் சொன்னதோடு, வழக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து சாத்தன்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பது குற்றவாளிகளும் நீதிபதி முன் ஆஜரானார்கள். மாலை 4.30 மணிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?

மத்திய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இக்கணக்கெடுப்பில் லிவ் இன் முறையில் வாழ்பவர்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு விளக்கம் ... மேலும் பார்க்க

போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!' - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் இடையே தொடர்ந்துவரும் போரால், ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அனுமதிக்கும் நாடுகளின் கப்பல் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் உலக நாடுகள் பலவ... மேலும் பார்க்க

"சிறுபான்மையினர் வாக்குகளை அவ்வளவு எளிதாகக் கவர முடியாது" - விஜய்யை விமர்சிக்கும் கருணாஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறார். 234 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது தவெக. பெரம்பூர், திருச... மேலும் பார்க்க

'டிஜிட்டல் மயமான தமிழக மட்பாண்டக் குறியீடுகள்' - எப்படி இருக்கிறது தொல்லியல் குறியீடு இணையதளம்?

தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், சிந்துவெளி நாகரிகத்துடனான அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பறைசாற்றும் வகையில், தொல்லியல் துறையில் ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு அகழாய்வுத் தளங்களி... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி குறைப்பு: மக்களுக்கு நேரடி பலன் இல்லையா? - காரணம் என்ன?

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், இந்த வரிக்குறைப்பின் பலன் மக்கள... மேலும் பார்க்க

``அடுத்த 60 நாள்களுக்கு..." - இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை வதந்திக்கு மத்திய அரசு விளக்கம்!

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது. அதனால் உலகநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் `நாம் இன்னொரு லா... மேலும் பார்க்க