செய்திகள் :

பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி குறைப்பு: மக்களுக்கு நேரடி பலன் இல்லையா? - காரணம் என்ன?

post image

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், இந்த வரிக்குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடி விலைக் குறைப்பாக கிடைக்காது.

கலால் வரி குறைப்பு தொடர்பாக நேற்று (26-ம் தேதி) வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான கூடுதல் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த விளைவாக, இரண்டு எரிபொருட்கள் மீதான வரிகளிலும் தலா ரூ.10 குறைக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு
மத்திய அரசு

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையிலான மோதலால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 149 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கடந்த பல வாரங்களாக இந்த விலை உயர்வு அழுத்தத்தைத் தாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தனியார் எரிபொருள் நிறுவனமான 'நயாரா எனர்ஜி', பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தியது.

எனவே, எண்ணெய் நிறுவங்களின் சுமையை குறைக்கும் வகையில் தற்போதைய வரிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கச்சா எண்ணெய் உயர்வால் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை ஈடுகட்டி, மேலும் விலை உயராமல் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரித்து பொதுமக்களின் கோபத்தைத் தூண்டும். போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பெட்ரோல் விலை நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இது அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் சூழல் நிலவும் என்பதால் இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.

``அடுத்த 60 நாள்களுக்கு..." - இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை வதந்திக்கு மத்திய அரசு விளக்கம்!

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது. அதனால் உலகநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் `நாம் இன்னொரு லா... மேலும் பார்க்க

எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது விசிக? - பொதுத் தொகுதிகள் பெறுவதில் குழப்பம்!

தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த 8 தொகுதிகள் எவை என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. குறிப்பாக பொதுத் தொகுதிகளை கேட்டுப் பெறுவதில... மேலும் பார்க்க

'மநீம-வுக்கு 2 சீட்!' சின்னத்துக்காக போராடிவரும் கமல்ஹாசன் - இறங்கி வருமா திமுக?

மக்கள் நீதி மய்யத்துக்கு 2 சீட் ஒதுக்க முன்வந்துள்ளது தி.மு.க. ஆனால், உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என கமல்ஹாசனை கட்டாயப் படுத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தி.மு.க - ம.நீ.ம இடையே என... மேலும் பார்க்க

'விசிக-வுக்கு 8 தொகுதிகள்!' சம்மதித்த திமுக.! ஒப்பந்தமாகும் கூட்டணி?

தி.மு.க - வி.சி.க கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் மார்ச் 23-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ... மேலும் பார்க்க

காவல்துறை நம் நண்பனாவது எப்போது? - ஆணாதிக்க அணுகுமுறைக்கு வேண்டும் முற்றுப்புள்ளி!

காவல் நிலையத்துக்கு பொது மக்கள் செல்லத் தயங்குவது, பெண்கள் அந்த திசையையே தீங்காக நினைப்பது எல்லாம் மாற்றப்பட வேண்டிய மனநிலை. ஆனால், அது மக்கள் மனதில் மேலும் மேலும் கெட்டிப்படும் வகையில்தான் நடந்துகொள்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! - வலுக்கும் கண்டனங்கள்

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த நிலை... மேலும் பார்க்க