செய்திகள் :

'விசிக-வுக்கு 8 தொகுதிகள்!' சம்மதித்த திமுக.! ஒப்பந்தமாகும் கூட்டணி?

post image

தி.மு.க - வி.சி.க கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் மார்ச் 23-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய தகவல்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பகிர்ந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தனியார் விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் "தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளையும் 2028-ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களில் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தி.மு.க-விடம் கேட்டுப் பெற வேண்டும்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தி.மு.க கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

திருமாவளவன் - ஸ்டாலின் சந்திப்பு

'வி.சி.க-வின் உயர்நிலை குழு கூட்டத்தில் என்ன நடந்தது?' என்ற கேள்வியுடன் துணைப் பொதுச்செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்... "2021 சட்டமன்ற தேர்தலில் 6 சீட்டுகளை பெற்று 4 தொகுதிகளில் வென்றது விசிக. இந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு பக்க பலமாக இருந்து கட்சியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தினோம். இதற்கிடையில் மாநில கட்சியாக அங்கீகாரமும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பெற்றோம். எனவே இந்தமுறை தி.மு.க-விடமிருந்து இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் நாங்களும் எங்கள் தலைவர் திருமாவும் உறுதியாக இருந்தார். எங்கள் விருப்பத்தையே தீர்மானமாக நிறைவேற்றினோம்" என்றனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள் "தீர்மானம் என்பது கட்சியினரின் விருப்பம்தானே தவிர, 10 தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அர்த்தமில்லை. சொல்லப்போனால் தி.மு.க-வுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். அதாவது 'இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவதுதான் நமது விருப்பம். ஆனால் தி.மு.க-வுக்கு மேலும் சில கட்சிகள் வந்திருப்பதால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள்வரை ஒதுக்கீடு செய்ய தி.மு.க சம்மதம் தெரிவித்திருக்கிறது, அதேபோல் புதுச்சேரியிலும் 1 தொகுதி தரவிருக்கிறார்கள்' என்றார். சி.பி.ஐ, சி.பி.எம், கொ.ம.தே.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு தி.மு.க தொகுதிகளை குறைத்திருக்கும்போது நமக்கு கூடுதல் தொகுதிகள் தந்திருப்பதை பாஸிட்டிவ்வாகவே கட்சியினரும் பார்க்கிறார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என பெரும்பாலான வி.சி.க நிர்வாகிகள் உயர்நிலைக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர்" என்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தோம் "முதலில் வி.சி.க-வுக்கு 6 தொகுதிகள் தரலாம் என பரிந்துரைத்தது தி.மு.க-வின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி, திருமாவின் அணுகுமுறைகள்மீது எப்போது முதல்வருக்கு மரியாதை இருந்ததால் 7 தொகுதிகள் தர முன்வந்தார். ஆனால், இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என உறுதிகாட்டிய நிலையில் 8 தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்தோம். அநேனமாக 8 தொகுதிகளுக்கு தி.மு.க - வி.சி.க இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புகள் இருக்கிறது" என்றனர்.

காவல்துறை நம் நண்பனாவது எப்போது? - ஆணாதிக்க அணுகுமுறைக்கு வேண்டும் முற்றுப்புள்ளி!

காவல் நிலையத்துக்கு பொது மக்கள் செல்லத் தயங்குவது, பெண்கள் அந்த திசையையே தீங்காக நினைப்பது எல்லாம் மாற்றப்பட வேண்டிய மனநிலை. ஆனால், அது மக்கள் மனதில் மேலும் மேலும் கெட்டிப்படும் வகையில்தான் நடந்துகொள்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! - வலுக்கும் கண்டனங்கள்

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த நிலை... மேலும் பார்க்க

எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!

இதுவரை பின்பற்றி வரும் வருமான வரி சட்டம் 1962-ம் ஆண்டு அமலுக்கு வந்தது ஆகும். வருகிற 1-ம் தேதி முதல், புது வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்தப் புதிய வருமான வரிச் சட்டத்தின் கொள்கைகள் மூன்று... மேலும் பார்க்க

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்' வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்க

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.இந்த வருமான வரிச் சட்டத்தின் கீழ் வர உள்ள மாற்றங்களைப் பார்க்கலாம்.> இனி (ஆடிட் அல்லாத) ITR - 3 மற்றும் 4-ன் வருமான வரித்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்ச் 23-ம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தன... மேலும் பார்க்க