செய்திகள் :

”தஞ்சாவூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுக்கலாமா?” - பல்ஸ் பார்த்த ஸ்டாலின்; பதறிய நிர்வாகிகள்

post image

திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு 34 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். நேற்று திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

இதேபோல் தஞ்சாவூர் தொகுதிக்கும் நேர்காணல் நடந்தது. அப்போது தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொகுதியில் தேமுதிக-விற்கு எவ்வளவு வாக்குகள் இருக்கும், கடந்த தேர்தல்களில் எத்தனை வாக்குகள் வாங்கினர், இம்முறை அவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் கூடுதல் பலமா என்றெல்லாம் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

தஞ்சாவூர் தொகுதிக்கு நேர்காணல் நடத்தும் ஸ்டாலின்
தஞ்சாவூர் தொகுதிக்கு நேர்காணல் நடத்தும் ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து தொகுதியை கூட்டணிக்குக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். இதனால் நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் பதறியதுடன் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்படுமா எனக் கலக்கத்திலும் உள்ளனர்.

இது குறித்து உள்விபரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், ''சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேஎகம், சண்.இராமநாதன், துரை.சுதாகர், டாக்டர் அஞ்சுகம் பூபதி, எ.ஜி.அண்ணா, கரந்தை உதயநிதி, செந்தமிழ்செல்வன், எஸ்.எஸ்.கருணாவதி, து.செல்வம், மணிமாறன் உள்ளிட்ட 34 பேர் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்திருந்தனர்.

அவர்களிடத்தில் முதல்வர், தொகுதி நிலவரத்தையும், தேமுதிக பலம் குறித்தும் கேட்டார். அப்போது சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம், தேமுதிக-விற்கு 5,000 வாக்குகள் இருக்கும் எனச் சொல்ல மற்றொருவர் 10,000 வாக்குகள் இருப்பதாகச் சொன்னார். தொகுதியை கூட்டணிக்குக் கொடுக்கலாமானு கேட்டதற்கு நீலமேகம், தஞ்சாவூர் நமக்கு சாதகமான தொகுதி. அதுமட்டுமில்லை தலைவர் கருணாநிதி நின்ற தொகுதி. இங்கு நாம் பத்து முறை வெற்றி பெற்றுள்ளோம்.

தஞ்சாவூர் திமுக
தஞ்சாவூர் திமுக

இம்முறையும் தொகுதி நமக்கு சாதகமாக இருக்கிறது. தஞ்சாவூரில் திமுக நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்றாராம். கூட்டணிக் கட்சிகள் நம்முடன் இருக்கிறார்கள்.

எல்லோரும் இப்படியே சொன்னால் கூட்டணிக்கு எப்படி நாம் சீட் ஒதுக்க முடியும் என ஸ்டாலின் கேட்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து தலைமை அறிவிப்பவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஸ்டாலின் எல்லோரிடத்திலும் சொல்லி அனுப்பியுள்ளார் என்றனர்.

கோவை: திமுக வேட்பாளர் தேர்வில் சப்ரைஸ்; செந்தில் பாலாஜியால் ஷாக்கான உடன்பிறப்புகள்!

கோவை மாவட்டத்தைக் கைப்பற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தொகுதிப் பங்கீ... மேலும் பார்க்க

'இரட்டை இலக்க தொகுதிகள்; ராஜ்ய சபா சீட்...' - திமுக கூட்டணியில் திடீர் டிமாண்ட் ஏற்றும் திருமா!

திமுகவில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே போய் கொண்டிருக்கிறது. கறாராக பேசிக்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சரிகட்டி, 5 தொகுதிகளில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. இந்நிலையில்,... மேலும் பார்க்க

தஞ்சை: விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்ததில் விபத்து: சிகிச்சையில் இருந்த கல்லுாரி மாணவர் பலி

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில், கடந்த 4ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். திருச்சிய... மேலும் பார்க்க

'முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று கேட்டோம்.!' - 5 தொகுதிகளை ஒப்புக்கொண்டு வெதும்பிய பெ.சண்முகம்!

திமுக கூட்டணியில் இழுபறியாகவே நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதியாக திமுக வழங்குவதாக கூறிய 5 தொகுதிகளுக்கே ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூ... மேலும் பார்க்க