செய்திகள் :

கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சிக்கிய பலே கொள்ளையன்

post image

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டம்விட்டு பூட்டை உடைத்து திருடிய நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் தேனீர் கடை நடத்தி வந்த பஞ்சாக்ஷரி சங்கய்ய சுவாமி(37) என்ற அந்த நபர் தனது கூட்டாளியுடன் இணைந்து மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடி வந்தான்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை பூர்வீகமாக கொண்ட சங்கய்ய சுவாமி பெங்களூருவில் வீட்டை உடைத்து திருடியதாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 180 கிராம் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சங்கய்யா சுவாமியிடம் விசாரித்தபோது ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் தனது கூட்டாளியுடன் இணைந்து வீடுகளில் பூட்டை உடைத்து திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது வரை 200 வீடுகளில் திருடி இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளான். திருடிய பொருட்களில் பெரும்பகுதி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவனது கூட்டாளியிடம் இருக்கிறது. அவனை தேடி வருகிறோம். 100 திருட்டு தொடர்பாக மும்பை போலீஸார் பல முறை சங்கய்யாவை கைது செய்திருக்கின்றனர். திருடிய பொருட்களில் இருந்து தனது கொல்கத்தா காதலிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

அவனது மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் ஏராளமான புகைப்படங்கள் இருந்தது. அவை நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போராடும் நடிகைகள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. திருட்டு பணத்தில் அந்த நடிகைகளை மும்பை ஹோட்டல்களுக்கு அழைத்துச்சென்று நெருக்கமாக இருந்துள்ளான். குஜராத் போலீஸார் திருட்டு தொடர்பாக சங்கய்யா சுவாமியை 2016ம் ஆண்டு கைது செய்தனர். இவ்வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மும்பை போலீஸார் அவனை கைது செய்தனர். ஆனால் ஜாமீனில் விடுதலையாகிவிட்டான். அதன் பிறகுதான் பெங்களூர்வில் கடந்த மாதம் 400 கிராம் தங்க ஆபரணங்களை திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டான். கைது செய்யப்பட்ட அவனிடமிருந்து 180 கிராம் தங்கம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவனுடன் சேர்ந்து திருடிய அவனது கூட்டாளியிடம் எஞ்சிய தங்க நகைகள் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`நாங்க காதலிக்கிறோம்’ - 17 வயது சிறுமியை கடத்திச்சென்று, வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கைது

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் கடந்த மாதம் 7ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.... மேலும் பார்க்க

நெல்லையில் திருடிய ஸ்கூட்டர்... கோவில்பட்டியில் மீட்பு; விருதுநகர் பெண் கைது!

Aநெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார், தனது வீட்டி... மேலும் பார்க்க

வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீசி தாக்கிய யானை!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருக்கும். தற்போது யானைகள் வலசை காலம் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல... மேலும் பார்க்க

Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூடு

சுவீடனில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிட்டதட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு போலீசார் கூறுகையில், "பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச... மேலும் பார்க்க

மும்பை: "கடன திரும்ப தா இல்ல என்ன கல்யாணம் பண்ணு" - மிரட்டிய காதலியைக் குத்திக் கொன்ற காதலன்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு சித்ரவதை செய்த காதலியைக் காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அம்பர்நாத்தில் வசித்து வந்தவர் சீ... மேலும் பார்க்க

கோவை: திருமணம் கடந்த உறவு - மனைவியின் காதலனை கொன்ற கணவன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம... மேலும் பார்க்க