செய்திகள் :

கோவை: திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 75 வயது மூதாட்டி உயிரிழப்பு!

post image

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மேல் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். 75 வயது மூதாட்டியான அவர், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து,

திமுக ஆர்ப்பாட்டம்

திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்னூர், ஒட்டர்பாளையம் பகுதியில் திமுக சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், மூதாட்டிகள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொன்னம்மாளும் அழைத்து வரப்பட்டிருந்தார். அப்போது பொன்னம்மாளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

மூதாட்டி மரணம்

அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பொன்னாம்மாளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் பொன்னம்மாள் உயிரிழந்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பாஜக அண்ணாமலை

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக-வினர் மக்களை மிரட்டி ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, "ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனை... மேலும் பார்க்க

கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் பாஜக? - அதிர்ச்சியில் அதிமுக... கூட்டணியில் சலசலப்பா?!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.ம... மேலும் பார்க்க

`இந்தியாவுலயே ரெண்டு பேர் இந்த வகை, ஒருத்தர் மோடி, இன்னொருத்தர் விஜய்!' - ஜேம்ஸ் வசந்தன் பேட்டி

தமிழில் சேட்டிலைட் சேனல்கள் வந்த புதிதில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தமிழ் மீது அதீத பிரியம் கொண்ட இவரது நிகழ்ச்சிகளுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஒருகட்டத்தில் சின்னத்திர... மேலும் பார்க்க

`மனோ தங்கராஜ் மலைகளை உடைத்து கோடிக்கணக்கில்...' - அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறு... மேலும் பார்க்க