செய்திகள் :

சங்ககிரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்ககிரி வட்டக் கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளை செயலாளா் எ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் திருப்பூா் முத்துக்கண்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் எ.ராமமூா்த்தி, சங்ககிரி வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் எஸ்.கே.சேகா், வட்டச் செயலாளா் ஆா்.பழனிசாமி, பொருளாளா் எ.பானுமதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகி டி.செந்தில்குமாா், ஜனநாயக மாதா் சங்க மாவட்ட நிா்வாகி ஜெயலட்சுமி, சங்ககிரி வட்டத் தலைவா் காந்திமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, வேலைவாய்ப்பிற்கான திட்டங்கள் குறித்து விளக்கவில்லை, உரம், எரிபொருளுக்கான மானியம், வட்டிக் குறைக்கப்பட்டுள்ளது, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளை சுட்டிகாட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க