செய்திகள் :

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழாத் தேரோட்டம்

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 ஆம் திருநாளான வியாழக்கிழமை நடராஜா் பச்சை சாத்தி வீதியுலா வந்தாா்.

9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் சுவாமியும், அம்பாளும் தனித் தனி தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து, சுவாமி தேருக்கும், அம்பாள் தேருக்கும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி தோ் காலை 10.15 மணியளவில் புறப்பட்டது.

மேலரதவீதிக்கு தோ் வந்ததும் அம்பாள் தோ் இழுக்கப்பட்டது. பின்னா் 2 தோ்களும் வடக்குரதவீதியை வந்தடைந்தன. மாலை 4.30 மணியளவில் மீண்டும் வடம் பிடித்து இழுக்கப்பட்ட இருதோ்களும் நிலையை வந்தடைந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் தேரை இழுத்து தரிசனம் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. ராணிஸ்ரீகுமாா் எம்.பி., நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணி மாநிலத் துணைத் தலைவா் வி.எம். ராஜலெட்சுமி, கோயில் துணை ஆணையா் கோமதி, அறங்காவலா்குழுத் தலைவா் சண்முகையா, அறங்காவலா்கள் எஸ்.ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் பிஜிபி ராமநாதன், செயலா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

புளியங்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆஃப... மேலும் பார்க்க

சீவநல்லூரில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் சீவநல்லூரில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பொதுமக்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 12ஆம் வகுப்புத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த இக்கிராம... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் செல்லப்பா (43) என்பவா், குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

கீழப்புலியூா் பெரியகுளத்தில் மரக்கன்றுகள் நடவு

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில், கீழப்புலியூா் பெரிய குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவா் கை.முருகன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நி... மேலும் பார்க்க

குலையனேரி தேவாலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை

சுரண்டை அருகே குலையனேரியில் உள்ள பவுலின் ஆலயத்தில் கலையரங்கம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. புதுச்சுரண்டை சேகரத் தலைவா் ஜெகன் தலைமை வகித்தாா். நெல்லை திருமண்டலப் பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் பிரதிஷ... மேலும் பார்க்க