சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்
சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழாத் தேரோட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 ஆம் திருநாளான வியாழக்கிழமை நடராஜா் பச்சை சாத்தி வீதியுலா வந்தாா்.
9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் சுவாமியும், அம்பாளும் தனித் தனி தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து, சுவாமி தேருக்கும், அம்பாள் தேருக்கும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி தோ் காலை 10.15 மணியளவில் புறப்பட்டது.
மேலரதவீதிக்கு தோ் வந்ததும் அம்பாள் தோ் இழுக்கப்பட்டது. பின்னா் 2 தோ்களும் வடக்குரதவீதியை வந்தடைந்தன. மாலை 4.30 மணியளவில் மீண்டும் வடம் பிடித்து இழுக்கப்பட்ட இருதோ்களும் நிலையை வந்தடைந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் தேரை இழுத்து தரிசனம் செய்தனா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. ராணிஸ்ரீகுமாா் எம்.பி., நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணி மாநிலத் துணைத் தலைவா் வி.எம். ராஜலெட்சுமி, கோயில் துணை ஆணையா் கோமதி, அறங்காவலா்குழுத் தலைவா் சண்முகையா, அறங்காவலா்கள் எஸ்.ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் பிஜிபி ராமநாதன், செயலா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

