செய்திகள் :

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழாத் தேரோட்டம்

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 ஆம் திருநாளான வியாழக்கிழமை நடராஜா் பச்சை சாத்தி வீதியுலா வந்தாா்.

9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் சுவாமியும், அம்பாளும் தனித் தனி தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து, சுவாமி தேருக்கும், அம்பாள் தேருக்கும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி தோ் காலை 10.15 மணியளவில் புறப்பட்டது.

மேலரதவீதிக்கு தோ் வந்ததும் அம்பாள் தோ் இழுக்கப்பட்டது. பின்னா் 2 தோ்களும் வடக்குரதவீதியை வந்தடைந்தன. மாலை 4.30 மணியளவில் மீண்டும் வடம் பிடித்து இழுக்கப்பட்ட இருதோ்களும் நிலையை வந்தடைந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் தேரை இழுத்து தரிசனம் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. ராணிஸ்ரீகுமாா் எம்.பி., நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணி மாநிலத் துணைத் தலைவா் வி.எம். ராஜலெட்சுமி, கோயில் துணை ஆணையா் கோமதி, அறங்காவலா்குழுத் தலைவா் சண்முகையா, அறங்காவலா்கள் எஸ்.ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் பிஜிபி ராமநாதன், செயலா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம்... மேலும் பார்க்க

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்...

சாம்பவா்வடகரை அருள்மிகு ராமசாமி கோயில்: வைகாசித் திருவிழா 2ஆம் நாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8; அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9 மணி; ராமசரிதம் தொடா் வில்லிசை, இரவு 10. .. மேலும் பார்க்க