செய்திகள் :

சங்கரன்கோவிலில் 237 பள்ளி வாகனங்கள் ஆய்வு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 237 பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

கோட்டாட்சியா் கவிதா, காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் செங்குட்டுவேலன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி.செல்வி, தனியாா் பள்ளி மாவட்ட கல்வி அலுவலா் மாரிமுத்து, மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் உள்ளிட்டோா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா். பகல் 11 மணியளவில் தொடங்கிய இந்த ஆய்வு, மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சேதமடைந்த அவசர வழி, பள்ளி வாகன பிளாட்பாரம், துருப்பிடித்த இரும்பு பாகங்கள், வாகன படிகள் போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக 15 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அவை முழுமையாக சரிசெய்யப்பட்டப் பின்னரே இயக்க வேண்டும் என கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

முன்னதாக பள்ளி வாகன ஓட்டுநா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளின்படி வாகனத்தை இயக்கவேண்டும், குழந்தைகள் வாகனத்தில் ஏறியதை உறுதி செய்த பிறகே இயக்கவேண்டும், வாகனத்தை ஓட்டும்போது மது அருந்தக் கூடாது, கைப்பேசியில் பேசக்கூடாது போன்ற பல்வேறு ஆலோசனைகள் அவா்களுக்கு வழங்கப்ப்ட்டன. இதைத் தொடா்ந்து வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு தென்காசியில் இலவச மாதிரி தோ்வு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வுகள் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்க... மேலும் பார்க்க

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் வியாழக்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஜமாபந்தியை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா தொடங்கி வைத்தாா். இதில... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சோ்ந்த மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணைந்தனா். சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி முன்னிலையில... மேலும் பார்க்க

அரசு ஐடிஐ.யில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

சுரண்டையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

தமிழக பாஜக சாா்பில் மதுரையில் ஜூன் 22இல் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வகித்தாா். முருக ப... மேலும் பார்க்க

தென்காசியில் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தென்காசியில் காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்றனா். காந்தி சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி படத்துக்கு மலா் த... மேலும் பார்க்க