செய்திகள் :

சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?

post image

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரை இந்திய அணி வென்ற போதிலும், சஞ்சு சாம்சனுக்கு இந்த டி20 தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

இதையும் படிக்க: இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?

கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி சதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்துக்கு எதிராக பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன், வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்...

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக ஒரே மாதியான ஷாட்டினை தேர்வு செய்து சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இப்படியே தொடர்ச்சியாக ஆட்டமிழந்தால், அவரது மனமே அவரை குழப்பும் விதமாக செயல்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட்டமிழந்தது போன்று தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தால், அவரது மனமே அவரை குழப்பும் விதமாக செயல்படும். பந்துவீச்சாளர் குறிப்பிட்ட விதத்தில் பந்துவீசுகிறார். அவர் வீசும் ஒரே மாதிரியான பந்தில் நான் தொடர்ந்து ஆட்டமிழக்கிறேன். நான் ஏன் அவ்வாறு ஆட்டமிழக்கிறேன்.

இதையும் படிக்க: 100-வது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர்!

பந்துவீச்சாளர் நன்றாக பந்துவீசுகிறாரா அல்லது என்னுடைய பேட்டிங்கில் குறை உள்ளதா? இது போன்ற பந்துவீச்சுக்கு ஏற்றவாறு என்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? இது போன்ற பல கேள்விகள் எழும். ஒரு முறை இது போன்று பல கேள்விகள் உருவாகிவிட்டால், நாம் நன்றாக விளையாடுவதை அது கடினமாக்கிவிடும் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது, சஞ்சு சாம்சனுக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அடுத்த ஒரு மாதத்துக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெக்காவுக்குச் சென்ற முகமது சிராஜ்..!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புனிதப் பயணமாக மெக்காவுக்குச் சென்றுள்ளார். கடந்த இரவு முகமது சிராஜ் சம்சாபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய விமான நிலையத்தில் இருந்து மெக்கா புறப்பட்டதாக வி... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வாரா ரோஹித் சர்மா?

இந்தியாவின் கேப்டன்களில் எம்.எஸ்.தோனி மட்டுமே அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளார். இவருக்கு அடுத்து கேப்டனான விராட் கோலி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. தற்போதைய கேப்டன் ரோஹித் சர... மேலும் பார்க்க

3-வது ஒருநாள்: மூவர் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 241 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடை... மேலும் பார்க்க

எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் விராட் கோலி: பாக். வீரர்

விராட் கோலி உலகத் தரத்திலான வீரர் எனவும், எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் எனவும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி ... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி; ஷிகர் தவான் கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்ஸியில் இந்திய வீரர்கள்!

பாகிஸ்தான் பெயர் பொறித்த சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய வீரர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடை... மேலும் பார்க்க