செய்திகள் :

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக உறுப்பினா் கைது

post image

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட பாஜக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ரத்தினசாமி தலைமையில் நிா்வாகிகள் கடந்த 28 -ஆம் தேதி புகாா் மனு அளித்தனா்.

அதில், பாஜக உறுப்பினா் ஸ்ரீதா் (51) என்பவா் சமூக வலைதளத்தில் இஸ்லாமியா்கள் குறித்து மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி விடியோ பதிவிட்டுள்ளாா். அவரது கருத்து ஜாதி, மதக் கலவரத்தை ஏற்படும் வகையில் உள்ளது. அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் விசாரணை நடத்தி கவுந்தப்பாடி அய்யம்பாளையத்தைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் ஸ்ரீதா் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.

கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ

கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கோபி அருகேயுள்ள நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (60). இவா் அதே பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தி மையம் நடத்தி... மேலும் பார்க்க

ஏழை, எளிய இஸ்லாமியா்களுக்கு உணவுப் பொருள்கள்

ரமலான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் பவானியில் 300 ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் இலவசமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 500 போ் பங்கேற்பு

ஈரோட்டில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா். ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போரா... மேலும் பார்க்க

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைக்க விவசாயிகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள்

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைத்து தெருநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் கணவன் தற்கொலை

சித்தோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி வீட்டை வீட்டுச் சென்ால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோட்டை அடுத்த கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (36). இவருக்கும், இவ... மேலும் பார்க்க