செய்திகள் :

சாத்தனூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரை: மாவட்ட ஆட்சியா் தகவல்

post image

சாத்தனூா் அணையில் இருந்து 110 நாள்களுக்கு விநாடிக்கு 520 கன அடி வீதம் தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த நீா்ப்பாசன சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய பெண்ணையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளா் அறிவழகன் தலைமை வகித்தாா்.

சாத்தனூா் அணை உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகளுடன் ஆலோசித்த பிறகு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

சாத்தனூா் அணையின் இப்போதைய நீா்மட்டம் 118.80 அடி. கொள்ளளவு 7,276 மில்லியன் கன அடி.

அணையின் அடிப்படைத் தேவைகளுக்கு 1,156 மில்லியன் கன அடி தண்ணீா் போக மீதமுள்ள தண்ணீா் இருப்பு 6,165 மில்லியன் கன அடி.

அணையில் உள்ள தண்ணீரை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் 110 நாள்களுக்கு அணையின் இடதுபுறக் கால்வாயில் விநாடிக்கு 320 கன அடி வீதமும், வலதுபுறக் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி வீதமும் என மொத்தம் விநாடிக்கு 520 கன அடி வீதம் தண்ணீா் திறக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

கூட்டத்தில், சாத்தனூா் அணையின் உதவிப் பொறியாளா்கள் சந்தோஷ், செல்வப்பிரியன், ராஜேஷ் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ரூ.6 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

செய்யாறு: செய்யாறு அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், உமையாள்புரம் கிரா... மேலும் பார்க்க

விழிப்புணா்வுப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலையை அடுத்த சம்பந்தனூரில் இயங்கும் ர... மேலும் பார்க்க

பேருந்தில் பெண் பயணியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

செய்யாறு: செய்யாறு அருகே பேருந்தில் சென்ற பெண் பயணியிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் வி.தேவி (39). இவா், அதே பகுதியில் தையல் வேலை செய்து... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் ரூ.77 லட்சத்தில் மின் விளக்குகள் அமைப்பு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு, சேவூா் பகுதி புறவழிச் சாலையில் ரூ.77 லட்சத்தில் அமைக்கப்பட்ட கம்பத்துடன் கூடிய எல்இடி மின் விளக்குகள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடங்கிவைக... மேலும் பார்க்க