சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கோபி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
கோபி வாய்க்கால் ரோடு தாமு நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கோபி அருகே கோவை பிரிவில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம்பககத்தினா் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
ஆனால், வழியிலேயே முருகேசன் உயிரிழந்தாா். இது குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.