செய்திகள் :

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

post image

காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை சிதம்பரம் மூலம்  சொல்லியிருக்கிறார் சோனியா என்கிறார்கள் அவர்கள். 

டெல்லியில் நேற்று இரவு சோனியாவின் இல்லத்தில் கார்கே, ராகுல், சோனியா, வேணுகோபால் உள்ளிட்டவர்கள் தமிழக காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் நிலவும் குழப்பான சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்துள்ளார்கள். இந்த ஆலோசனைக்கு முன்பாக தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தி.மு.க நம்மை கூட்டணியில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை” என்கிற ரீதியில் வேணுகோபாலிடம் கருத்து சொல்லியுள்ளார்.

சோனியா - கார்கே - ராகுல்

இதனால் தி.மு.க வுடன் கூட்டணி இருக்காது என்று இருந்த நிலையில், தி.மு.க வினர் மார்ச் 3-ம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்த முடிவை அறிவியுங்கள் என்று காங்கிரஸ் தலைமைக்கு சொல்லியுள்ளது. மற்றொருபுறம் தி.மு.க வின் மூத்த தலைவர் டி.ஆர் பாலு, தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் தமிழகத்தில் உள்ள நிலவரம் பற்றியும், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்க வேண்டிய அவசியம் குறித்த விசயங்களையும் சோனியாவின் காதுக்கு நேற்றே கொண்டு போய் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரத்தை மட்டும் தனியாக தனது இல்லத்துக்கு அழைத்து தமிழக நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது தான் சிதம்பரம், “தேவையில்லாமல் நாம் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறார்கள். நம்பகமான கூட்டணியை நாம் கைவிட கூடாது” என்று சொல்லியுள்ளார். 

சோனியா காந்தியும் தி.மு.க-வுடன் கூட்டணியை தொடரவே விரும்பியுள்ளார். “கடந்த முறையை விட கூடுதல் இடங்களை கொஞ்சம் கொடுக்க சொல்லுங்கள், கூட்டணி தொடர்பான முழு அதிகாரத்தையும் கார்கே வசம் ஒப்படைத்துவிட்டோம்”  இந்த மெசேஜை  ஸ்டாலினிடம் நேரடியாக சொல்லிவிடுங்கள் என்று சொல்லியுள்ளார். 

மல்லிகார்ஜுன கார்கே - சோனியா காந்தி

தி.மு.கவுடன் கூட்டணியை தொடர சோனியா காந்தி விரும்புவதை புரிந்துக்கொண்ட சிதம்பரம், மார்ச் 3-ம் தேதி அதிகாலையே டெல்லியிலிருந்து கிளம்பிவிட்டார். தான் முதல்வர் இல்லத்திற்கு வரும் தகவலை செல்வபெருந்தகை மூலம் முதல்வருக்கு தெரியப்படுத்திவிட்டார்.

ஏற்கனவே கார்க்கே, தி.மு.க  கூட்டணி ஆதரவாளராக இருக்கும் நிலையில், கூட்டணி முடிவை இனி அவரே எடுப்பார் என்று  டெல்லி தலைமை அறிவிக்க உள்ளது. அதன்படி இன்று மாலை அதிகாரபூர்வமாக தி.மு.க பேச்சுவார்த்தை குழுவை காங்கிரஸ் குழு சந்தித்து எண்ணிக்கை மற்றும் ராஜ்யசபா இடங்களையும் உறுதி செய்ய உள்ளது என்கிறார்கள். 

சிதம்பரம் இந்த விவகாரத்தை கையில் எடுத்தபோதே தி.மு.க தரப்பு உற்சாகமாகிவிட்டது. சிதம்பரம் சிக்கல் இல்லாமல் இந்த விவகாரத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள். முதல்வர் சந்திப்பு, கூட்டணி குழு பேச்சுவார்த்தை என அடுத்தடுத்து தி.மு,க -காங்கிரஸ் கூட்டணி சுமுகமான பாதையில் பயணிக்க தயாராகிவிட்டது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர். 

சிதம்பரத்தின் முயற்சி கைகொடுக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.!

விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர

விஜய் தஞ்சை விஜயம்!தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரு... மேலும் பார்க்க

``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல" - கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எ... மேலும் பார்க்க

`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" - சீமான் எச்சரிக்கை

"இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எ... மேலும் பார்க்க

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028' கணக்கு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற... மேலும் பார்க்க

'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் ... மேலும் பார்க்க