செய்திகள் :

சிதறி கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல் பாகங்கள் - கோவையில் நரபலியா?

post image

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி - வீரியாம்பாளையம் சாலை உள்ளது. அங்கு மாரியம்மன் கோயில் அருகே புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் வீசப்பட்டிருந்தது.

கோவை குழந்தை சடலம்

குழந்தையின் கால் பாகங்களை நாய்களால் கடித்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் கோவில்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் என்றும்,

கோவை
கோவை

கால்கள் மட்டுமல்லாமல் குழந்தையின் கைகளும் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தையின் பாலினம் குறித்த விபரம் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.

குழந்தையின் உடல் கோயில் அருகே கண்டறியப்பட்டதால், இது நரபலியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குழந்தை நரபலி செய்யப்பட்டு இறந்ததா அல்லது திருமணம் கடந்த உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து வீசி சென்றார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை குழந்தை சடலம்

இதுதொடர்பாக சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க