செய்திகள் :

சிதறி கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல் பாகங்கள் - கோவையில் நரபலியா?

post image

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி - வீரியாம்பாளையம் சாலை உள்ளது. அங்கு மாரியம்மன் கோயில் அருகே புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் வீசப்பட்டிருந்தது.

கோவை குழந்தை சடலம்

குழந்தையின் கால் பாகங்களை நாய்களால் கடித்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் கோவில்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் என்றும்,

கோவை
கோவை

கால்கள் மட்டுமல்லாமல் குழந்தையின் கைகளும் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தையின் பாலினம் குறித்த விபரம் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.

குழந்தையின் உடல் கோயில் அருகே கண்டறியப்பட்டதால், இது நரபலியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குழந்தை நரபலி செய்யப்பட்டு இறந்ததா அல்லது திருமணம் கடந்த உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து வீசி சென்றார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை குழந்தை சடலம்

இதுதொடர்பாக சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: பள்ளிக்கு செல்லும் வழியில் ஆசிரியை நடுரோட்டில் வெட்டிக் கொலை; இளைஞர் வெறிச்செயல்

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரிடம் சி.பி.ஐ விசாரணை

கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க

கரூர்: வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறிப்பு; திமுக பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார்!

திருச்சி, அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவா (வயது: 33). இவர், குளித்தலை காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் கிளையில் மேலாளராக வேலை பார்த்து வருக... மேலும் பார்க்க

கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும் தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந... மேலும் பார்க்க

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப்... மேலும் பார்க்க