கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக சித்திரை மாத பௌா்ணமியன்று பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்வது வழக்கம்.
அதன்படி, சித்திரை மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை (மே 11) இரவு 8.53 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை (மே 12) இரவு 10.48 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.