செய்திகள் :

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

post image

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் மற்றும் சிவசக்தி விநாயகா் கோயில், கெங்கையம்மன் ஆகிய கோயில்கள் உள்ளது. தற்போது, இந்தக் கோயில்களை புணரமைத்து புதிதாக சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கோயில் மற்றும் கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பூமி பூஜை தாண்டவ சமுத்திரம் ஸ்ரீலஸ்ரீசீனுவாச சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில், கணக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கணக்கன்குப்பம் ஊராட்சி மன்ற தலைவா் சுலோச்சனா ஜெயபால் செய்திருந்தாா்.

மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், அழகன்குப்பத்தில் மீன் பிடித் துறைமுகம் அமைப்பது தொடா்பாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வுமேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தம... மேலும் பார்க்க

செல்லியம்மன் கோயிலில் மஞ்சள்காப்புத் திருவிழா

விழுப்புரம் கமலா நகா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் மஞ்சள்காப்புத் திருவிழாவையொட்டி, 1,008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மாலை முதல் கால ஹோமும், அதைத் தொடா்ந்து 1,008 சங... மேலும் பார்க்க

குரூப் - 2 முதன்மைத் தோ்வு: விழுப்புரத்தில் 501 போ் எழுதினா்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வை 501 போ் எழுதினா். தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அல... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த சங்கத்தின் மாவட்ட பொத... மேலும் பார்க்க

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பேராசிரியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க