செய்திகள் :

‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

post image

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை எழுப்புவதற்கே என்ன தகுதி இருக்கிறது? நாளொரு நாடகமும் பொழுதொரு வேஷமும் போட்டு அரசியல் பிழைப்பு நடத்திவரும் சீமான், காங்கிரஸ் பேரியக்கத்தையும், ராகுல் காந்தியையும் விமர்சிப்பது அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறிய செயல். ராகுல் காந்தியை விமர்சிப்பதற்கு சீமானுக்கு கொள்கைத் தகுதியோ, அரசியல் நேர்மையோ, மக்கள் அங்கீகாரமோ கிடையாது.

‘நாய் வேஷம் போட்டால் குரைக்கவும், நரி வேஷம் போட்டால் ஊளையிடவும்’ மட்டுமே தெரிந்த ஒரு வசன வியாபாரி, கொள்கை அரசியலைப் பற்றி பேசுவது தமிழ்நாட்டு மக்களுக்கே வேடிக்கையாக உள்ளது. நான்கு சதவீத வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தன்னை மாற்று சக்தியாக விளம்பரம் செய்து கொள்வதால் மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது. இன்று தி.மு.க-வினர் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுதியான வாக்கு வங்கியும், அடித்தட்டு தொண்டர்களின் இடைவிடாத உழைப்பும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

நேற்று வரை தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தவர், இன்று தி.மு.க-வின் அரசியல் வாதங்களைத் தூக்கிச் சுமப்பது எதற்காக? இந்த புதிய அரசியல் நெருக்கத்தின் நோக்கம் என்ன? சீமான் திடீரென தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்? வெறும் மேடை வசனங்களால் உண்மைகளை மறைக்க முடியாது. சீமானுக்கு ஓர் நேரடிச் சவால்.  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடையில் ஜோக் அடிக்கும் சீமானே, உமக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், காங்கிரஸ் ஆதரவோடு வெற்றி பெற்ற கனிமொழி உள்ளிட்ட தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்கச் சொல்லுங்கள். காங்கிரஸ் இல்லாத களத்தில் அவர்களால் வெல்ல முடியுமா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.

சீமான்
சீமான்

தேர்தல் களத்தில் நிரூபிக்க முடியாதவர்கள் மேடைகளில் மட்டும் வீர வசனம் பேசுவது அரசியல் அல்ல. வார்த்தை ஜாலங்களை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நேரடியாகக் களத்திற்கு வாருங்கள். யார் வெல்வார்கள், யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது, யாருக்கு வெறும் மேடை ஆதரவு மட்டுமே இருக்கிறது என்பதை தேர்தல் களத்தில் சந்தித்துப் பார்ப்போம். சீமான் என்று பெயர் வைத்தவன் எல்லாம் சீமானாகிவிட முடியாது. மேடைக்கு மேடை தத்துப்பித்தென்று பேசி மக்களைத் திசைதிருப்பும் வசன வியாபாரியே... உமது போலி அரசியலையும், முரண்பட்ட நிலைப்பாடுகளையும், தேர்தலுக்கு தேர்தல் மாறும் பேச்சுகளையும் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். காங்கிரஸ் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் எல்லை மீறி பேசினால், அதற்கான அரசியல் ரீதியான பதிலை மக்களின் மன்றத்தில்  சந்திக்க நேரிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது..."எப்போதும் அம்பேத்கர்... மேலும் பார்க்க

'மாநகராட்சியில் சொத்துக்கணக்கை காட்டாத மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள்!' - விவரம் என்ன?

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல் வெ... மேலும் பார்க்க

பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி.பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறவில்லை தமிழக வெற்றிக் கழகம்.... மேலும் பார்க்க

"அதிமுகவின் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும்" - நிர்மல் குமாருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

அதிமுக குறித்து நேற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுகவை பாஜகவில் இணைக்கும் நிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ராஜ்ய சபா சீட் தந்த... மேலும் பார்க்க

`அதிமுக-வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது; பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழும்' - எடப்பாடி சூளுரை

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அ.தி‌.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி மக்களுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று பங்கேற்றிருந்தார். கட்சி... மேலும் பார்க்க