செய்திகள் :

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் - விமானியைத் தேடும் பணி தீவிரம்!

post image

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களை ஈரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு விமானியை ஈரான் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர்ச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் விமானம், அமெரிக்காவின் அதிநவீன F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரகத்தைச் சேர்ந்தது. இரண்டு பேர் பயணிக்கக்கூடிய இந்த ஜெட் விமானத்தில் இருந்த ஒருவரை அமெரிக்கச் சிறப்புப் படைகள் பத்திரமாக மீட்டுள்ளன. மற்றொரு விமானப் பணியாளர் குறித்து இதுவரை தகவல் இல்லை. இதேபோல், குவைத் வான்பரப்பில் தாக்கப்பட்ட அமெரிக்காவின் A-10 வார்ஹாக் ரக விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். காணாமல் போன விமானியைத் தேடச் சென்ற அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அதிகாரப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ட்ரம்ப், ``நிச்சயமாக இந்தச் சம்பவம் ஈரானுடனான பேச்சுவார்த்தையைப் பாதிக்காது. ஏனெனில் இது ஒரு போர்" என்று குறிப்பிட்டார். முன்னதாக, அமெரிக்க விமானங்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது தடையின்றிப் பறக்கும் அளவிற்கு ஈரானின் இராணுவம் பலவீனமடைந்துவிட்டது என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகமது பாகர் காலிபாஃப்
முகமது பாகர் காலிபாஃப்

`காணாமல் போன அமெரிக்க விமானியை உயிருடன் பிடிப்பவர்களுக்கு மதிப்புமிக்க வெகுமதி வழங்கப்படும்' என்று ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானில் விமானம் விழுந்த பகுதியைச் சுற்றி ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்காவைக் கிண்டல் செய்யும் வகையில், ``ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள், இப்போது தங்கள் விமானிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க