'திருநெல்வேலி செல்லும் விஜய்; வருத்தத்தில் கட்சி நிர்வாகிகள்!' - காரணம் என்ன?
சீரியல் நடிகை திடீர் மரணம்; அதிர்ச்சியில் சின்னத்திரை!
கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி திடீரென உயிரிழந்த செய்தி, சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீலங்காவை சேர்ந்த நடிகை சுபாஷினி, திரைத்துறை மீதான காதலால் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
பெங்களூரில் தான் கணவருடன் வசித்து வந்தவர், கயல் சீரியல் படப்பிடிப்புக்காக சென்னை ஐயப்பன்தாங்களில் தங்கியிருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர், சம்பவம் நடந்த நாளுக்கு முன்புவரை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கும் அவரின் கணவருக்கும் இடையே நடந்த பிரச்னையால் இந்த துயர முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி வெளியானதுமே சினிமா வட்டாரமும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.



















