செய்திகள் :

'செங்கேணி அம்மன் கோவிலில் வழிபாடு.!' - தொகுதிக்குள் சென்டிமென்டாக பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி!

post image

திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று பிரசாரத்துக்கு வந்த உதயநிதி 2021 கனெக்ட்டோடு செண்டிமெண்டாக தனது பிரசாரத்தை தொகுதிக்குள் ஆரம்பித்தார்.

உதயநிதி
உதயநிதி

துணை முதல்வரான உதயநிதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார். இதற்கிடையில் நேற்று (ஏப்ரல் 2) அவர் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

காலையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், மாலையிலேயே தனது தொகுதியில் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். அதற்காக மாவட்டச் செயலாளர் சிற்றரசு மேளதாளங்களுடன் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மாலை 5:30 மணியளவில் விவேகானந்தர் இல்லம் அருகே இருக்கும் அயோத்தியா நகரிலிருந்துதான் உதயநிதி பிரசாரத்தை தொடங்கினார். கடந்த 2021 தேர்தலிலும் உதயநிதி இதே பாயிண்ட்டில் இருந்துதான் தொகுதிக்குள் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்.

உதயநிதி
உதயநிதி

அந்தத் தேர்தலில் பெரு வெற்றிப் பெற்றதால் இந்த முறையும் சென்டிமென்டாக அதே இடத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார். மேலும், பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு அருகே இருக்கும் செங்கேணி அம்மன் கோவிலில் உதயநிதி, தயாநிதி மாறன், சிற்றரசு ஆகியோர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொகுதிக்குள் பேசிய உதயநிதி, 'கலைஞர் மூன்று முறை வென்ற தொகுதி இது. இந்த முறையும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்லவே உழைக்கிறேன். சென்னை எப்போதும் திமுகவசம்தான்' என்றார்.

நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! - என்ன காரணம்?

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரான மகேஷ், நாகர்கோவில் மேயராக இருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் கன்னியாகுமரி தொகுதி மகேஷ் போட்டியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க

யானையில் வந்த பண்ருட்டி ராமச்சந்திரன்! - திரும்பி பார்க்க வைத்த பாமகவின் முதல் வெற்றி!| முதல் களம்

முதல் களம் 13பாமகவின் முதல் தேர்தல் வெற்றி!1991-ல் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தேர்தல் அரங்கில் காலடி எடுத்து வைத்தது. முதல் தேர்தலில், அக்கட்சியின் வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்ற வெற்றி, பா... மேலும் பார்க்க

காங்கிரஸின் 'இந்திரா கேரண்டி' ; சி.பி.எம் சொல்லும் வாட்டர் மெட்ரோ - கேரளத்தில் அதிரடி வாக்குறுதிகள்!

கேரளத்தில் வரும் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் சி.பி.எம் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பா.ஜ.க ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.... மேலும் பார்க்க

'குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?'

'மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்' என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர் விஜய்.விஜய்... மேலும் பார்க்க