செய்திகள் :

"செங்கோட்டையனின் விஸ்வாசம்; அவர் அமைதியானவர் என்று நினைக்க வேண்டாம்" - டிடிவி தினகரன்

post image

டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க களமிறங்கியுள்ளனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பது இன்னும் உறுதியாகாமல் இழுபறியிலேயே இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்

இப்போது அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அவரைத் தொடர்ந்து பிற கட்சியில் இருந்து இன்னும் சில முக்கிய விஜபிக்கள் தவெகவில் இணையப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் டிடிவி தினகரன், "செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் மூத்த தலைவர். பழனிசாமி இடையில் வந்தவர். அதிமுகவின் விசுவாசியாக இருப்பவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் நம்பிக்கையாக நின்றவர்.

செங்கோட்டையன் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு செய்த துரோகத்தால் வந்த விளைவு. அண்ணன் செங்கோட்டையன் அமைதியானவர். ஆனால், ரொம்ப அழுத்தமானவர்.

செங்கோட்டையன் - பழனிசாமி விவகாரம் குறித்து பேசும் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்தவர் இப்போது கட்சி மாறியிருக்கிறார் என்றால் எவ்வளவு அழுத்தமாகவும், ஆழமாகவும் இந்த முடிவை எடுத்திருப்பார். பழனிசாமியின் துரோகத்திற்கு நிச்சயம் பாடம் புகட்டுவார் செங்கோட்டையன்.

தவெகவிற்குச் சென்றபிறகும் அம்மாவின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்தது அண்ணன் செங்கோட்டையனின் உண்மையான விசுவாசத்தைக் காட்டுகிறது. அது அவர் மீதான மரியாதையைக் கூட்டுகிறது. எங்களுக்கு எல்லாம் அது பெருமையாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.

`தற்போது தவெக; அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது..!' - செங்கோட்டையன் குறித்து நயினார்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக "காசி தமிழ் சங்கமம் 4.0" என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வரும... மேலும் பார்க்க

`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தி... மேலும் பார்க்க

'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்

'இனி யாரும் எதுவும் செய்ய முடியாது!'பா.ம.க-வில் ராமதாஸ், அன்புமணியிடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்தது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அது பகிரங்கமாக வெடித்தது. அந்தக் கூட்டத்தில் ரா... மேலும் பார்க்க

Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்

இனி தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களிலும் கட்டாயம் சஞ்சார் சாத்தி ஆப் இருக்க வேண்டும் என்றும்... ஏற்கெனவே உற்பத்தியான, விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த ஆப்பை இன்ஸ்டா... மேலும் பார்க்க

"அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயார்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க

DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?

ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி' என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால்,... மேலும் பார்க்க