செய்திகள் :

"செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது" - திருமாவளவன்

post image

செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.

அதனை தொடர்ந்து எடப்பாடி, செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி.

அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்று (நவ.26) செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

செங்கோட்டையன் - விஜய்
செங்கோட்டையன் - விஜய்

தற்போது தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் செங்கோட்டையன்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த திருமாவளவன், " செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியிருக்கிறது என ஏற்கனேவே செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார்.

அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவிற்கு பின்னடைவாக இருக்கும். அதேபோல நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

தவெகவில் பாஜக மற்றும் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல் நிகழ்ந்தால், அவருடைய அரசியல் கேள்விக்குறியாக மாறும்" என்று பேசியிருக்கிறார்.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க