செய்திகள் :

சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின்‌ பிளான்

post image

சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங்.

சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ‌ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன.

அதை எடுத்து வர, தன் கடையில் வேலை பார்க்கும் கோவாராம் மற்றும் பக்கத்துக் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஜித்தேந்தர் குமாரையும் அனுப்பியிருக்கிறார் ராவல்சிங்.

பைக்கில் சென்ற இருவரும் நீண்ட நேரமாக கடைக்கு வரவில்லை. இருவரது போனுமே 'ஸ்விட்ச் ஆஃப்'.

தங்கம் | நகைகள்
தங்கம் | நகைகள்

கோவாராமின் போன்கால்

கொஞ்ச நேரத்தில், கோவாராமிடம் இருந்து மற்றொரு எண்ணில் இருந்து கால் வந்திருக்கிறது. அருகில் இருந்த ஆட்டோகாரரிடம் இருந்து போன் வாங்கி பேசுவதாக கூறியிருக்கிறார்.

கோவாராமும், ஜித்தேந்தர் குமாரும் தங்க நகைகள் பார்சல்களை வாங்கி கொண்டு கிண்டி வழியே வந்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது, அவர்களை வழிமறித்த இருவர் தங்களை 'செங்கல்பட்டு ஜி.எஸ்.டி ஆபீசர்ஸ்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக, பார்சல் மற்றும் மொபைல் போன்களையும் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் அழைத்து சென்றிருக்கிறார்கள்.

பெருங்களத்தூர் அருகே அதிகாரிகளாக அறிமுகம் செய்து கொண்டவர்கள் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.

அதன் பின் தான், ராவல்சிங்கிற்கு போன் செய்திருக்கிறார் கோவாராம்.

ராவல்சிங் போலீஸில் புகார் கொடுக்க விசாரணை தொடங்கியுள்ளது.

விசாரணையில், இவை அனைத்தும் ஜித்தேந்தர் குமாரின் வேலை என்று தெரிய வந்திருக்கிறது.

தங்க நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் இருந்து இரு நண்பர்களை வரவழைத்திருக்கிறார் ஜித்தேந்தர் குமார்.

தற்போது ஜித்தேந்தர் குமார் மற்றும் அவருடைய ஒரு நண்பரை கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். இன்னொருவரை தேடி வருகிறார்கள் போலீஸார்.

சென்னை: தனியாக வசித்த முதியவர் கொலை; துணிக்கடை ஊழியரிடம் விசாரணை; என்ன நடந்தது?

சென்னை புரசைவாக்கம், அரசப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர், அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா. 2024-ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உஷா இறந்துவிட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? திருப்பூரில் சிக்கிய 6 வங்கதேசத்தினர்; பின்னணி என்ன?

நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்... மேலும் பார்க்க

சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; களமிறங்கிய போலீஸ்

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கடைக்கு 20-ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர், பார்சல் ஒன்றை வாட்ச்மேன் கிருஷ்ணா லால் என்பவரிடம் கொடுத்து, "இது உங்கள் கடையில் வேலை செய்யும் ஸ்ருத... மேலும் பார்க்க

மும்பை: குடும்பத்தோடு ஒரு மாதம் டிஜிட்டல் கைது; முதியவர் ரூ.1.83 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த மோசடியை மத்திய விசாரணை... மேலும் பார்க்க

வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் வீராசாமிநாதனுக்கு கத்திக்குத்து; என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.இதற்காக தொகுதியில் உள்ள ஒவ்வொ... மேலும் பார்க்க

பகலில் சலூன் கடை ஓனர்; இரவில் போதைப்பொருள் கேங்க் லீடர்! - பிஷ்னோய் கேங்கின் லேடி டான் நேகா

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்து கொண்டே டெல்லியில் இருக்கும் தனது கூட்டத்தை இயக்கி வருகிறான். பஞ்சாப், டெல்லி, ஹரியானாவில் அவனது கூட்டத்தினர் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர... மேலும் பார்க்க