செய்திகள் :

சென்னை: லவ் டார்ச்சர்; மார்பிங் போட்டோஸ் - இரண்டு குழந்தைகளின் தந்தை கைதான பின்னணி!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் ரஞ்சித்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 24 வயதுடைய பெண்ணிடம் பழகி வந்திருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரஞ்சித்குமார் லவ் டார்ச்சர் செய்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண், `நான் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலிக்கிறேன். அதனால் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள்' என ரஞ்சித்குமாரிடம் பல தடவை கூறியிருக்கிறார். ஆனால் ரஞ்சித்குமார் மனமாறாமல் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார்.

கைது
கைது

இதனால் அப்பெண் வேலையிலிருந்து நின்றுவிட்டார். அதன் பிறகும் ரஞ்சித்குமார் அந்தப் பெண்ணை மிரட்டி வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணின் போட்டோவை தன்னுடைய போட்டோவுடன் இணைத்து மார்பிங் செய்த ரஞ்சித்குமார், அதை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் காதலனிடமும் போட்டோ குறித்துப் பேசிய ரஞ்சித்குமார், அவரையும் மிரட்டியிருக்கிறார். ரஞ்சித்குமாரின் இத்தகைய டார்ச்சரால் மனமுடைந்த அப்பெண், ரஞ்சித்குமார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரஞ்சித்குமாமரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆதாரங்கள் அடிப்படையில் ரஞ்சித்குமாரைக் கைதுசெய்த போலீஸார், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரஞ்சித்குமார், சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு: மரகத முருகன் சிலை திருட்டு - மர்ம கும்பல் கைவரிசை காட்டியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருக்ன் சிலை இருந்தது. சம்பவத்தன்று இரவு கோயிலின் பூட்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சரின் மகன்கள் மோதல்: தம்பியை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற அண்ணன்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சரான மறைந்த வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

ராணிப்பேட்டையில், பாலாறு - பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm - Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர்

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்... மேலும் பார்க்க

`உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா?' குழந்தை பெற்று இறந்த பெண்ணின் சகோதரனிடம் டாக்டர் சர்ச்சை கேள்வி

மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை... மேலும் பார்க்க