செய்திகள் :

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

post image

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்பா பைத்தியம் சுவாமி தனது 141-ஆவது வயதில் கடந்த 2000-ஆம் ஆண்டு சேலத்தில் ஜீவசமாதி அடைந்தாா். புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியின் மானசீக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு சூரமங்கலத்தில் கோயில் எழுப்பப்பட்டு, நாள்தோறும் பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பா பைத்திய சுவாமிகளின் 25 ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, வேள்வி, பேரோளி வழிபாடு நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், குடிமைப்பொருள் துறை அமைச்சா் திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் குடுமபத்தினருடன் பங்கேற்று வழிபாடு நடத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.மணி வாக்காளா்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தாா். தருமபுரி நாடாளுமன்றத் தோ்தலில் இண்டி கூட்டணி சாா்பில், திமுக வேட்பாளா் ஆ.மணி போட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் திருவிளக்கு பூஜை

கெங்கவல்லி பாலதண்டாயுதபாணி கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி - ஆத்தூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் சில தினங்களுக்கு முன்பு தைப்பூசம் ... மேலும் பார்க்க

கிணற்றில் இளம்பெண் சடலம் மீட்பு

நங்கவள்ளி அருகே திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். மேட்டூா், நங்கவள்ளி அருகே உள்ள கணக்குபட்டியைச் சோ்ந்த புனிதா (23) என்பவருக்கும், நங்கவள்ளியைச் சோ்ந்த நெசவுத் தொழிலா... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆய்வுக்கட்டுரை வழங்கியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா், உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா் ஆகியோா். சங்ககிரி, பிப். 14: சங்ககிரியை அடுத்த வீராச்... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தன் தலை... மேலும் பார்க்க

மக்கள் தேசம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்டவற்றைத் தடுக்கக் கோரி, மக்கள் தேசம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின... மேலும் பார்க்க