செய்திகள் :

சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ராமதாஸ் தரப்பு புகார்

post image

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்பை மீறி அன்புமணி ஆதரவாளர்கள் பொய்யான புகார் மனுவை வழங்கி உள்ளதாகவும், பொய் புகார் வழங்கிய நபர்கள் மீதும் அவர்களை தூண்டிவிட்ட அன்புமணி மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் இன்று சேலம் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் ராமதாஸ் பங்கேற்க உள்ள இந்தக் கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

பாமக-வினர் புகார்

மேலும் சேலத்தில் பாமக செயற்குழு கூட்டம் நடத்தக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் வழங்கிய மனுவில் ராமதாஸின் படம் இடம்பெற்றுள்ளது. ராமதாஸின் படத்தை பயன்படுத்தி ராமதாஸ் கூட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என புகார் மனு வழங்குவது வேடிக்கையாக உள்ளது. `சூடு, சொரணை இருந்தால் ராமதாஸ் படத்தையும், பெயரையும் பயன்படுத்தாதீர்கள்!' என பாமக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கதிர் ராசரத்தினம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் - முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4-ல் காங்கிரஸ் கூட்டணியும், ஒ... மேலும் பார்க்க

"திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது"- ஆசிரியர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம்

சென்னையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் த... மேலும் பார்க்க

CPI: நூறாண்டைத் தொட்ட சிபிஐ; இந்தியாவில் வளர்ந்தது எப்படி? - வரலாறு சொல்லும் தகவல்!

இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம், என்னதான் 1800-களின் இறுதியில் நுழைந்திருந்தாலும், அதன்பின்னர் நிறைய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றியிருந்தாலும், பொதுவுடைமையை இந்தியாவில் படரச் செய்ததில் இந்தியக் கம்யூ... மேலும் பார்க்க

தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! - தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

'அதிகாரம் கொடியது!'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொ... மேலும் பார்க்க

``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்..." - ஆற்காடு நவாப் பேட்டி

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகி... மேலும் பார்க்க

6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத்திய இந்தியா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k - 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது.அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்த... மேலும் பார்க்க