செய்திகள் :

ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

post image

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மோடியின் மன்னிப்பு

அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, "ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை நாடும் உலகமும் பார்த்துள்ளன. சில குறும்புக்காரக் குழந்தைகள், எந்தவொரு நாகரிகமான சமூகத்திற்கும் பெருமை சேர்க்காத வகையில், மிகவும் ஆபாசமான வசவுச் சொற்களைப் பயன்படுத்தினர். நான் வசைபாடப்பட்டேன்.

எனது காலமான தாயாரும் வசைபாடப்பட்டார். அது எவ்வளவு மோசமான வடிவம் என்பது எனக்குத் தெரியும்.

நமது மகள்கள் இது போன்ற மொழியைப் பேசுவது ஒரு கலாசார அதிர்ச்சியைத் தருகிறது.

நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகம் எனது இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மோடி
மோடி

அபிஜித் தீப்கே பேச்சு

பிரதமர் மோடியின் வீடியோவிற்கு எதிர்வினையாற்றும் விதமாக காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "நேற்று மோடி அவர்களின் வீடியோவை நாம் அனைவரும் பார்த்தோம். அதில் அவர் குழந்தைகளைத் தான் மன்னிப்பதாகக் கூறியிருந்தார்.

சிறுமிகளை...

இன்றிரவும் அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிடுவார் என்று நான் கருதுகிறேன். அந்த வீடியோவில் அவர் மன்னிப்பு கேட்பார் என்று நான் நம்புகிறேன்.

குறிப்பாக, ஜூலை 20-ஆம் தேதி நடந்த தடியடிக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

12 வயது சிறுமிகளின் தலைகளைக் கூட காவல்துறை உடைத்துள்ளது.

ஜந்தர் மந்தர் CJP போராட்டம்
ஜந்தர் மந்தர் CJP போராட்டம்

மன்னிப்பு கேட்க வேண்டும்

பெண் பிள்ளைகளின் ஆடைகளை ஆண் காவல்துறை அதிகாரிகள் கிழித்ததோடு, அவர்களைக் கொடூரமாக அடித்துள்ளனர்.

அவர்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது.

எனவே, காவல்துறையினரால் இவ்வளவு கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அந்தச் சிறுமிகள் அனைவரிடமும் மோடி அவர்கள் இன்றிரவு வீடியோவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

நீட் போராட்டம், காவிரி: "அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" - தயாநிதி மாறன் மறைமுக சாடல்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட கால திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. அதன் பின், தவெக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இதன் பிறகு, திமுகவும், காங்கிரஸ் மாறி ம... மேலும் பார்க்க

"காங்கிரஸ் மேலிடம் சொல்வதை விட, திமுக சொல்வதை தான் டி.கே.சிவக்குமார் கேட்பார்" - நிர்மல் குமார்

காவிரி விவகாரம் மீண்டும் தமிழ்நாடு, கர்நாடகா இடையே பிரச்னையாக முற்றி வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மீண்டும் முயற்சிகளைச் செய்து வருகிறது கர்நாடகா அரசு. இதற்கு தமிழ்நாடு கண்டனங்களைத் தெரிவ... மேலும் பார்க்க

"காவிரி நம்மை பிரிப்பதற்குப் பதிலாக, ஒன்றிணைக்கட்டும்!" - விஜய்க்கு கர்நாடகா பாஜக சமாதான கடிதம்!

இந்தியாவில் எந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறதோ என்னவோ, கர்நாடகாவில் ஒரு விஷயத்தில் இருக்கும். அது தான் காவிரி குறுக்கே அணை கட்டுவது. கர்நாடகாவில் காங்க... மேலும் பார்க்க

'வாக்குச்சாவடி எண் 75; வாக்கு எண் 412' - கொளத்தூர் EVM மெஷினில் என்ன பிரச்னை ஏற்பட்டது?

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி ஐந்தாவது நாளாக நடந்து வருகிறது.EVM Verification "EVM இயந்திரங்கள் சரியாக பாதுகா... மேலும் பார்க்க

"அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!"- வெளுத்து வாங்கும் வேல்முருகன்

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான் ஜனதா கட்சியினர் நாடுமுழுக்க நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னையில் அவர்களது கட்சித் தலைமை அலுவலகத்திலேயே தொடர் போர... மேலும் பார்க்க

"இஸ்ரேலும் கைகோக்கிறது: ஈரான் போருக்கு தயார்; ஆனாலும் நிறுத்துகிறோம்" - ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

போர்... போர் நிறுத்தம்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... போர்... மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் - அமெரிக்கா போரில் நடந்து வரும் சம... மேலும் பார்க்க