செய்திகள் :

ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

post image

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மோடியின் மன்னிப்பு

அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, "ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை நாடும் உலகமும் பார்த்துள்ளன. சில குறும்புக்காரக் குழந்தைகள், எந்தவொரு நாகரிகமான சமூகத்திற்கும் பெருமை சேர்க்காத வகையில், மிகவும் ஆபாசமான வசவுச் சொற்களைப் பயன்படுத்தினர். நான் வசைபாடப்பட்டேன்.

எனது காலமான தாயாரும் வசைபாடப்பட்டார். அது எவ்வளவு மோசமான வடிவம் என்பது எனக்குத் தெரியும்.

நமது மகள்கள் இது போன்ற மொழியைப் பேசுவது ஒரு கலாசார அதிர்ச்சியைத் தருகிறது.

நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகம் எனது இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மோடி
மோடி

அபிஜித் தீப்கே பேச்சு

பிரதமர் மோடியின் வீடியோவிற்கு எதிர்வினையாற்றும் விதமாக காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "நேற்று மோடி அவர்களின் வீடியோவை நாம் அனைவரும் பார்த்தோம். அதில் அவர் குழந்தைகளைத் தான் மன்னிப்பதாகக் கூறியிருந்தார்.

சிறுமிகளை...

இன்றிரவும் அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிடுவார் என்று நான் கருதுகிறேன். அந்த வீடியோவில் அவர் மன்னிப்பு கேட்பார் என்று நான் நம்புகிறேன்.

குறிப்பாக, ஜூலை 20-ஆம் தேதி நடந்த தடியடிக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

12 வயது சிறுமிகளின் தலைகளைக் கூட காவல்துறை உடைத்துள்ளது.

ஜந்தர் மந்தர் CJP போராட்டம்
ஜந்தர் மந்தர் CJP போராட்டம்

மன்னிப்பு கேட்க வேண்டும்

பெண் பிள்ளைகளின் ஆடைகளை ஆண் காவல்துறை அதிகாரிகள் கிழித்ததோடு, அவர்களைக் கொடூரமாக அடித்துள்ளனர்.

அவர்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது.

எனவே, காவல்துறையினரால் இவ்வளவு கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அந்தச் சிறுமிகள் அனைவரிடமும் மோடி அவர்கள் இன்றிரவு வீடியோவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க