செய்திகள் :

"இஸ்ரேலும் கைகோக்கிறது: ஈரான் போருக்கு தயார்; ஆனாலும் நிறுத்துகிறோம்" - ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

post image

போர்... போர் நிறுத்தம்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... போர்... மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் - அமெரிக்கா போரில் நடந்து வரும் சம்பவங்கள்.

கடந்த 24-ம் தேதி முதல் இரு நாடுகளும் சத்தமில்லாமல் போர் நிறுத்தத்தில் இருந்தன. ஆனால், அமெரிக்காவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜூலை 28-ம் தேதி செல்ல, மீண்டும் தாக்குதலை தொடங்கியது ஈரான்.

இதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்காவும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

ட்ரம்ப் எச்சரிக்கை

நேற்று ட்ரம்ப், "ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். ஒரு கட்டத்தில் அவர்கள், 'எங்களால் இதற்கு மேல் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்று கதறும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" என்று பேசியிருந்தார்.

ஈரான் தாக்குதல்
ஈரான் தாக்குதல்
இந்த நிலையில் ட்ரம்ப் தற்போது தனது ட்ரூத் பக்கத்தில் தாக்குதல் நிறுத்தம் குறித்து பதிவிட்டிருக்கிறார்...

"இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவப் பலத்தோடும், அதிகாரத்தோடும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தாக்க தயாராக, முழு வீச்சில் அமெரிக்கா தயாராக இருக்கிறது.

கோரிக்கை வந்துள்ளது...

இருந்தாலும், ஒரு ஒப்பந்தத்திற்கான எல்லைக்கோடுகள் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால், எந்தவொரு தாக்குதலையும் நிறுத்தி வைக்குமாறு ஈரான் மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து நமக்குக் கோரிக்கை வந்துள்ளது.

இதில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை உடனடியாக, முழுமையாக மற்றும் முற்றிலுமாகத் திறப்பதும், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கும்.

இஸ்ரேலும் கைகோக்கிறது

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் வருங்கால நலனைக் கருதியும், அதேபோல் வளம்மிக்க ஈரானின் எதிர்கால வாழ்வைக் கருதியும், விரைவாக ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன்.

இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் கைகோக்கிறது. அனைவரும் உடனடியாக வேலையைத் தொடங்குங்கள், இதை விரைவாகச் செய்து முடியுங்கள்!"

ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மோடியின் மன்னிப்பு அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, "ஜந... மேலும் பார்க்க

"அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!"- வெளுத்து வாங்கும் வேல்முருகன்

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான் ஜனதா கட்சியினர் நாடுமுழுக்க நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னையில் அவர்களது கட்சித் தலைமை அலுவலகத்திலேயே தொடர் போர... மேலும் பார்க்க

மதுரை: `என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' - பாதுகாப்பு கோரி மனு கொடுத்த தவெக எம்.எல்.ஏ

உசிலம்பட்டி தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் மகாலிங்கம் மதுரை மாவட்ட எஸ்பி-யை நேற்று சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அதில்," தொகுதியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, நேரில் சந்திக்கும் நிகழ்வுகளின் போது, ... மேலும் பார்க்க

"தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்தான்" - தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி விமர்சனம்

மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட்.1) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.பிறகு செய்தியாளர்... மேலும் பார்க்க

"என் பதவி பறிக்கப்பட்ட காரணத்தை திமுக தலைமை சொல்லட்டும்" - தோப்பு வெங்கடாசலம்

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி‌ ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து விடுவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்... மேலும் பார்க்க

"’பரிதாபங்கள்’ ட்ரோல் காயப்படுத்துச்சு; ஆனா..." - விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மகன் அக்ஷய்

’சட்டமன்றத்தின் கதவுகளைப் பூட்டுவதாகச் சொல்கிறார்கள், பூட்டிப் பாருங்கள், உங்களது எலும்பை உடைக்கறோம்’ எனப் பொது மேடையில் முதல்வர் விஜய் குறித்து பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்க... மேலும் பார்க்க