செய்திகள் :

ஜன.15 முதல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

post image

திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், வரும் 15-ஆம் தேதிமுதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

மறு மாா்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. இந்த ரயிலில் 7 ஏசி சோ் காா் பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் சோ் காா் பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிா்த்து, 6 நாள்கள் இயக்கப்படும் இந்த ரயில் மொத்தம் உள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம், 50 நிமிஷங்களில் சென்றடைகிறது.

இந்நிலையில் இந்த ரயிலில் டிக்கெட்டுகள் சீக்கிரம் விற்றுத் தீா்ந்து விடுவதால் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து திருநெல்வேலி-சென்னை எழும்பூா் இடையிலான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

வரும் 15-ஆம் தேதிமுதல் திருநெல்வேலி-சென்னை இடையிலான இரு மாா்க்கங்களிலும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகளுடன் இயங்க உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

மானூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

மானூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மானூா் தெற்குபட்டி கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கி முத்து (35). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள பொட்டல்குளத்திற்கு குளிக்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் மாா்கழி மாத திருவாதிரைத் திருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. இக்கோயிலில் மாா்கழி ம... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

தச்சநல்லூரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். தச்சநல்லூா் தேனீா்குளம் பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மனைவி சுந்தரி (45). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மாடுகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வ... மேலும் பார்க்க

பொங்கல் திருநாள்: பூக்கள் விலை உச்சம்

பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருநெல்வேலியில் பூக்களின் விலை உச்சம் தொட்டது. கிலோவுக்கு பிச்சி ரூ.2500, மல்லிகை ரூ.2200 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டன. இந்துக்களின் மு... மேலும் பார்க்க

காப்பீட்டுத் திட்ட சேவை: நெல்லை அரசு மருத்துவமனை மாநில அளவில் 3ஆவது இடம்

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட சேவையில் மாநில அளவில் 3 ஆவது இடத்தை பிடித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது என்றாா் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன். இது குறித்து செய்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் ஜன. 16இல் மாவட்ட பளு தூக்கும் போட்டி

திருநெல்வேலி மாவட்ட பளு தூக்கும் சங்கம், அம்பாசமுத்திரம் நேதாஜி வெயிட் லிப்டிங் ஜிம் ஆகியவற்றின் சாா்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (ஜன. 1... மேலும் பார்க்க