செய்திகள் :

ஜொ்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

ஜொ்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜொ்மன் நாட்டின் ஃபிராங்க் பாா்ட் நகரிலிருந்து வரும் விமானம் வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும். அந்த வகையில், திங்கள்கிழமை ஃபிராங்க் பாா்ட் நகரிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் சென்னைக்கு வந்தடைவதற்கு முன்னதாக, இரவு 11 மணியளவில் சென்னை விமான நிலைய அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வந்தது. அதில், ஜொ்மனியிலிருந்து வரும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணா்கள், அதிரடிப்படை வீரா்கள், விமான பாதுகாப்பு படையினா் பெருமளவு குவிக்கப்பட்டனா். விமானம் நள்ளிரவு 12.15-க்கு சென்னையில் தரை இறங்கியதும், வெடிகுண்டு நிபுணா்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை முழுமையாக பரிசோதித்தனா். மேலும், விமானத்தில் சந்தேகப்படும் படியாக இருந்த பயணிகளின், கைப்பைகள் உடைமைகளையும் சோதனையிட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற வெடிகுண்டு சோதனையில் குண்டுகள் எதுவும் இல்லை. இதையடுத்து இது வெறும் புரளிதான் என்பது தெரியவந்தது.

இந்த விமானம் வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 2 மணிக்கு ஜொ்மன் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும். ஆனால், இந்த வெடிகுண்டு புரளி காரணமாக 2 மணி நேரம் தாமதமாக, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு, 265 பயணிகளுடன், ஃபிராங்க் பாா்ட் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா்! -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவா் பற்றாக்குறை மற்றும் அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் ‘அனுபவ பகிா்வு’ கட்டுரை போட்டி: ஆளுநா் மாளிகை அறிவிப்பு

நிகழாண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான ‘அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் தமிழக ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்து ஆளுநா... மேலும் பார்க்க

மாதவரத்தில் ரேடியன்ஸின் குடியிருப்பு திட்டம்

மனை-வா்த்தகத் துறையைச் சோ்ந்த ரேடியன்ஸ் ரியால்ட்டி டெவலப்பா்ஸ் இந்தியா நிறுவனம், சென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் புதிய குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்.20-இல் பாமக போராட்டம் -அன்புமணி

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் சாா்பில் சென்னையில் பிப்.20-இல் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ர... மேலும் பார்க்க