செய்திகள் :

"தான் உயிரியல் தந்தை இல்லை என்றால் குழந்தைக்கு பராமரிப்புத் தொகை கொடுக்கவேண்டாம்" - சுப்ரீம் கோர்ட்

post image

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் போது ஆண்கள் தங்களது மாஜி மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும்.

சில நேரங்களில் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி ஆண்களில் சிலர் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க முடியாது என்று கூறுவதுண்டு.

சுப்ரீம் கோர்ட்டில் அது போன்ற ஒரு மனு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அப்பெண் தனக்கும், தனது மகளுக்கும் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்று கோரி கீழ் கோர்ட் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் போன்றவற்றில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இவ்வழக்கு கீழ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை நடத்தவேண்டும் என்றும் அப்பெண்ணின் கணவர் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட் குழந்தைக்கு டி.என்.ஏ.சோதனை நடத்த உத்தரவிட்டது. அதில் குழந்தை சம்பந்தப்பட்ட ஆணிற்குப் பிறந்தது இல்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தைக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது. அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பெண் மேல் முறையீடு செய்து இருந்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றமும் அப்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதையடுத்து அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இம்மனு நீதிபதிகள் சஞ்சய் மற்றும் கோடேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அப்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், உயிரியல் ரீதியாகத் தனக்கு பிறக்காத ஒரு குழந்தைக்கு ஒரு ஆணை பராமரிப்புத் தொகை செலுத்தும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆண் அக்குழந்தையின் தாயைத் திருமணம் செய்துகொண்ட பிறகு அக்குழந்தை பிறந்திருந்தாலும் கூட, இவ்விதி பொருந்தும். எனினும், இவ்விதி நடைமுறைக்கு வர வேண்டுமெனில், அக்குழந்தைக்கு அந்த ஆண் தந்தை அல்ல என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் குழந்தைக்கு டி.என்.ஏ.சோதனை நடத்தப்பட்டு இருப்பதையும், அதன் முடிவு அறிக்கைக்கு குழந்தையின் தாய் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: "யாரும் குற்றவாளிகள் இல்லை" - கடைசியாக இருந்த 4 பேரும் விடுதலை

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நான்கு குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மசூதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இக்க... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண்

சமீபத்தில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.கவினர் மும்பையில் போராட்டம் நடத்தினர். மும்பையில் பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன்... மேலும் பார்க்க

பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண்

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மக்களால் வெளியில் வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாகவே இருக்கும்... மேலும் பார்க்க

தரையிறங்க முடியாமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம்; அச்சத்தில் அழுத பயணிகள்; என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் இருந்து ஹூப்ளிக்கு Fly91 Flight என்ற தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்தபோது ஹூப்ளி அருகில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனா... மேலும் பார்க்க

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது' - அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிய இருக்கிறது. ஈரானுடன் மீண்டும் எப்போது அமெ... மேலும் பார்க்க