செய்திகள் :

தரையிறங்க முடியாமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம்; அச்சத்தில் அழுத பயணிகள்; என்ன நடந்தது?

post image

ஹைதராபாத்தில் இருந்து ஹூப்ளிக்கு Fly91 Flight என்றதனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்தபோது ஹூப்ளி அருகில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானம் தரையிறங்க முடியவில்லை. நிலைமையை சரி செய்யவும், பாதுகாப்பான முறையில் தரையிறங்க பைலட் முயற்சி மேற்கொண்டார். இதனால் விமானம் முண்டகோட், தாவணகெரே மற்றும் சிவமொகா உள்ளிட்ட பகுதிகளின் மேல் வட்டமிட்டவாறு, ஏறக்குறைய நான்கு மணி நேரம் வானிலேயே பறந்துகொண்டிருந்தது.

விமானத்தைத் தரையிறக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்காததால் விமானம் பெங்களூரு நோக்கி திருப்பி விடப்பட்டது. விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிந்தவுடன் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அச்சத்தில் அழுத பயணிகள்
அச்சத்தில் அழுத பயணிகள்

அனைவரும் கதறி அழ ஆரம்பித்தனர். சில பயணிகள் கடவுளே எப்படியாவது எங்களைக் காப்பாற்று என்று கூறி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.

ஒரு பெண் பயணி அழுது கொண்டே கடவுளிடம் பிரார்த்தனை செய்த வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாக பரவியது.

எப்போது என்ன நடக்குமோ என்ற பரபரப்பு விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளிடமும் இருந்தது. விமானத்தின் குலுங்கல் தீவிரமடைந்தபோது, ​​பெண் பயணி தன் முகத்தில் கண்ணீர் வழிந்தோட, கட்டுப்படுத்த முடியாமல் விம்மி அழத் தொடங்கினார்.

கடவுளே காப்பாற்று என்ற வார்த்தை விமானத்தில் அடிக்கடி கேட்டபடி இருந்தது. நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் மறுஜென்மம் எடுத்தது போன்ற ஒரு நிம்மதியுடன் விமானத்தில் இருந்து வெளியில் இறங்கி வந்தனர்.

அவர்கள் விமானத்தில் இருந்து தப்பித்தது கடவுள் புண்ணியம்தான் என்று தெரிவித்தனர்.

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது' - அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிய இருக்கிறது. ஈரானுடன் மீண்டும் எப்போது அமெ... மேலும் பார்க்க

தீபிகா படுகோனேவுக்கு இரண்டாவது குழந்தை; மகள் மூலம் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த பிறகு தீபிகா படுகோனே படங்களில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அ... மேலும் பார்க்க

மேற்கு Vs மத்திய குழு; சிம்பன்சிகளிடையே வெடித்த `சிவில் வார்!' - உகாண்டாவில் அதிர்ச்சி!

சுமார் 25 ஆண்டுகளாக உகாண்டாவின் ங்கோகோ (Ngogo) காடுகளில் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி சமூகம் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது.சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட இந்த மாபெரும் கூட்டம், ஒரு முன்மாதிரி சமூ... மேலும் பார்க்க

விராட் கோலி போட்ட லைக்; இணையத்தில் வைரலாகும் LizLaz - யார் இவர்?

இன்ஸ்டாகிராமில் தென்னாப்பிரிக்கா இன்ப்ளூயன்சர் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்ப... மேலும் பார்க்க

ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அ... மேலும் பார்க்க

`பேய் நடமாட்டம்' - மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - சிவசேனா அமைச்சர்

மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா சார்பாக அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிர்சாத். இவர் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். சாம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசு... மேலும் பார்க்க