செய்திகள் :

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

post image

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. எனவே காதலை கைவிடும்படி அவரது தந்தை விஜய் கேட்டுக்கொண்டார். ஆனால் அப்பெண் தனது காதலில் பிடிவாதமாக இருந்தார்.

இதனால் விஜய் தனது நண்பர் அப்துல் மன்னன் என்பவரின் துணையோடு வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்து தனது மகளை அதில் அழைத்து சென்றார். அவர்கள் சடங்கு செய்யவேண்டும் என்று கூறி சுல்தான்பூர் என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பகல் முழுவதும் சுற்றிவிட்டு இரவு ஆனதும், நள்ளிரவு 1 மணிக்கு காரில் உறங்கிக்கொண்டிருந்த மகளை விஜய் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

அதன் பிறகு கையோடு எடுத்து சென்று இருந்த ஆசிட்டை அப்பெண் முகத்தில் ஊற்றி அடையாளம் தெரியாதபடி செய்தனர். உடலை அங்குள்ள கால்வாய் ஒன்றில் போட்டுவிட்டு வந்துவிட்டனர்.

வந்த பிறகு இரண்டு நாள் கழித்து தனது மகளை காணவில்லை என்று கூறி விஜய் ஆன்லைன் மூலம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பெண்ணின் அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் அங்கிருந்த போன் விபரங்களை ஆய்வு செய்தபோது விஜய் சம்பவ இடத்தில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரையடுத்து அவரது நண்பரையும் போலீஸார் கைது செய்தனர்.

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க

180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலி... மேலும் பார்க்க

பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண்ணைத் திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு; கேரள சிபிஎம் நிர்வாகிகளிடம் விசாரணை?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்... மேலும் பார்க்க