செய்திகள் :

`பேய் நடமாட்டம்' - மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - சிவசேனா அமைச்சர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா சார்பாக அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிர்சாத். இவர் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். சாம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் சஞ்சய் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,''சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி தலைமையகம் ஒரு காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்த நிலமாக இருந்தது. இப்போது அங்குள்ள ஆவிகள் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன. எனவே மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மாநகராட்சி அலுவலக கட்டடம் ஒரு நிழலின் கீழ் இருக்கிறது. கட்டடம் நிற்கும் இடம் முன்பு அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது. இது ஒரு புதைகுழியின் ஒரு பகுதியாக இருப்பதால், பேய் நடமாட்டம் இங்கு காணப்படுகின்றன.

மாநகராட்சி அலுவலகம்

மேலும் அவை மக்களை அமைதியின்மைக்கு ஆளாக்குகின்றன. இதிலிருந்து நீங்கள் விடுதலை பெற விரும்பினால், சரியான இடத்தில் கட்டடத்தைக் கட்டுங்கள். நகரம் மேம்பட வேண்டும். இந்த ஆன்மாக்கள்கூட சாந்தி அடையும், நீங்களும் நிம்மதி அடைவீர்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

அவரது கருத்து பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அவரது கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது. இது குறித்து நெட்டிசன்கள், அமைச்சரை விஞ்ஞானமற்ற மற்றும் உணர்ச்சியற்றவர்" என்று குறிப்பிட்டனர். இத்தகைய அறிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான திட்டம் இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் சஞ்சய் தனது கருத்து குறித்து விளக்கம் கொடுக்கவில்லை.

ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அ... மேலும் பார்க்க

`மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய... மேலும் பார்க்க

`நினைவு குறைந்துவிட்டது' முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மூளை பக்கவாதம் - நண்பர் தகவல்

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி 1990களில் அதிக அளவில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் வினோத் காம்ப்ளி, மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசி... மேலும் பார்க்க

`பீஃப் உண்ணுங்கள்; நமாஸ் செய்யுங்கள்'- TCS-ல் மத மாற்ற முயற்சி; Undercover sketch-ல் சிக்கிய கும்பல்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள்... மேலும் பார்க்க

கைநழுவிய வேட்டை... கால் நழுவிய சிங்கம்! 15 அடி ஆழக் கிணற்றில் ஒரு மணி நேரத் திக் திக்! | Viral Video

வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சி... மேலும் பார்க்க

`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!

இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் ப... மேலும் பார்க்க