செய்திகள் :

'திமிறிய கூட்டம்...லாக் ஆன பிரசார வாகனம்!' - விஜய்யின் எழும்பூர் பிரசாரம் ரத்தான பின்னணி!

post image

தவெக தலைவர் விஜய் சென்னையில் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், எழும்பூரில் திட்டமிட்ட பாய்ண்ட்டுக்கு வராமல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார். விஜய் பிரசாரத்தை ரத்து செய்ததன் பின்னணி என்ன?

Vijay
Vijay

தி.நகர் முத்துரங்கன் சாலை, ஆயிரம் விளக்கு சுதந்திர தின பூங்கா, எழும்பூர் ரித்தர்டன் சாலை ஆகியவற்றில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டிருந்தது. அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாங்கரை வீட்டிலிருந்து மாலை 3:15 மணிக்கு கிளம்பிய விஜய் 4:15 மணிக்கு முதல் ஸ்பாட்டான முத்துரங்கன் சாலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு தி.நகரில் தவெக சார்பில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கிருந்து புறப்பட்டு வள்ளுவர் கோட்டம் அருகே சுதந்திர தின பூங்கா பக்கம் வந்து ஆயிரம் விளக்கு தொகுதியின் தவெக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகரை தொண்டர்கள் முன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இரண்டாவது பாய்ண்டை முடித்துவிட்டு எழும்பூர் ரித்தர்டன் சாலையை நோக்கி கிளம்பினார். வள்ளுவர் கோட்டம் ஹைரோடு பூந்தமல்லி ஹைரோடை பிடித்து ரித்தர்டன் ரோடுக்கு வந்து சேருவதுதான் விஜய்யின் திட்டம். அதன்படி, வள்ளுவர் கோட்டத்தை தாண்டியவுடனேயே எழும்பூர் வேட்பாளரான ராஜ்மோகன் விஜய்யின் வாகனத்தில் ஏறிவிட்டார். அவரை அறிமுகப்படுத்தியபடியே விஜய் ரித்தர்டன் சாலை நோக்கி வந்தார். மூன்றாவது பாய்ண்டை எட்டுவதற்கு 200 மீட்டர் மட்டுமே இருக்கையில், அந்த பாய்ண்டுக்கு செல்லாமல் அப்படியே நீலாங்கரை நோக்கி சென்றுவிட்டார்.

Vijay
Vijay

விஜய் ஏன் அந்த மூன்றாவது ஸ்பாட்டுக்கு செல்லாமல் சென்றார் என மாவட்டச் செயலாளர் பூக்கடை குமாரிடம் பேசினோம். 'ரித்தர்டன் சாலை மிக குறுகிய சாலை. அங்கே அதிகப்படியான மக்கள் கூடியிருந்தனர். தலைவரின் வாகனம் பாய்ண்டை நெருங்குவதற்கு முன்பே எல்லாரும் மெயின் ரோடுக்கு ஓடி வந்துவிட்டனர். இதனால் தலைவரின் வாகனத்தை மெயின் ரோடிலிருந்து ரித்தர்டன் சாலைக்குள் திருப்பிக் கொண்டு வர முடியவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்களே அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அந்த பாய்ண்டுக்கு செல்ல வேண்டாமென முடிவெடுத்து விட்டோம்' என்றார்.

'நேரமிருந்தும் பிரச்னைகளை பேச மறுத்த விஜய்; ஏமாற்றமடைந்த தவெக தொண்டர்கள்!' - என்ன நடந்தது?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். தி.நகர் தொடங்கி எழும்பூர் வரைக்கும் வாகனத்தில் விஜய், மக்கள் மத்தியில் பேசாமல் போனது தொண்டர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.Vijayதி.நகர... மேலும் பார்க்க

Malacca Strait பக்கம் திரும்பும் அமெரிக்கா: சீனாவிற்கு 'பெரிய செக்?' இந்தியாவும் கைக்கோக்குமா?

'என்ன பார்வை நம்ம பக்கம் திரும்புது?' என்பதுபோல, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து மெல்ல மெல்ல அமெரிக்காவின் கண்கள் மலாக்கா ஜலசந்தி பக்கம் திரும்புகிறது போலும். தென் கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கிறது மலாக... மேலும் பார்க்க

`தென்மாநிலங்களின் உரிமைக்கே உலையா?' - தொகுதி மறுவரையறை: அவசியமா... ஆபத்தா?

எதிர்க்கும் கட்சிகள்தொகுதி மறுவரையறைமத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு எதிர்க்கட்சிகளுக்கு விடுத்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட... மேலும் பார்க்க

`கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கும்போது...'- தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அப்பகுதியைச் சேர்ந்த ராணி தனது சேதமடைந்த வீட்டைப் பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் 2024 நவம்பர் மா... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவால் முற்றுகை; இருந்தும், சீன கப்பல் பயணிக்கிறது - இது எப்படிச் சாத்தியம்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12), ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் உள்நுழையவும், வெளியே போகவும் முடியாதவாறு அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, அம... மேலும் பார்க்க