செய்திகள் :

டெல்லி: ``2 நிமிடங்களில் முடிந்துவிடும்" - ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

post image

டெல்லியில் ஓடும் காரினுள்ளே 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிழக்கு டெல்லியின் மாண்டவளி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் அளித்துள்ள புகாரில், ``எனக்கு அறிமுகமான அந்த நபர் 'மோமோஸ்' சாப்பிடலாம் என்று கூறி காரில் அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து, காரில் எரிபொருள் (CNG) நிரப்ப வேண்டும் என்று கூறி, காரைத் திடீரென ஆள்நடமாட்டமில்லாத ஒரு வெறிச்சோடிய பகுதிக்குத் திருப்பினார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பாழடைந்த பகுதிக்குச் சென்றதும், காரை நிறுத்த மறுத்த அந்த நபர், என்னிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டார்.

மேலும், என் அனுமதியின்றி உடலைத் தொட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதோடு, தன்னை காரை விட்டு கீழே இறங்காதவாறு தடுத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் காரின் ஜன்னல் வழியே குதித்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என மிரட்டி தப்பினேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கொடூரமான சூழ்நிலையிலும் மனதை உலுக்கும் ஒரு வீடியோவை அந்தப் பெண் தனது மொபைல் போனில் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.

அதில், "என்னை விட்டுவிடுங்கள்" என்று அந்தப் பெண் கதறி அழுவதும், அதற்கு அந்த நபர் "இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும்" என்று கூறி, பெண்ணின் நற்பெயரைக் கெடுத்துவிடுவதாக மிரட்டும் அதிர்ச்சி உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.

ஒரு கட்டத்தில் பயமும் ஆத்திரமும் அடைந்த அந்த இளம்பெண், காரின் ஜன்னல் வழியே வெளியே குதிக்க முயன்றுள்ளார். "நீ என்னை மீண்டும் தொட்டால், ஓடும் வாகனத்தின் முன்பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்; என் உடலைத் தொட உனக்கு அனுமதியில்லை" என்று அந்த நபர் முன் தைரியமாகப் போராடியுள்ளார்.

இந்த வீடியோ ஆதாரம் தற்போது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள நபரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எடமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (30). விவாகரத்தான இவர், கடந்த ஜூன் 27-ம் தேதி திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எண் 108-ல் வாடகைக்கு தங்கியு... மேலும் பார்க்க

கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.மனு (40). கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக ஒரு சிறுமி சென்றுள்ளார்... மேலும் பார்க்க

தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல்

தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்... மேலும் பார்க்க

கடலூர்: பண்ருட்டியில் இருவர் கொலை செய்யப்பட்டது உண்மையா ? - சம்பவத்தின் முழு பின்னணி இதுதான்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வாசலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, தமிழக மக்களை பதற்றமடைய வைத்திருக்கிறது. மிக சரியாக 13 விநாடிகள் ஓடும... மேலும் பார்க்க

Shashank Singh: சமையல்காரர் மீது தாக்குதலா? - போலீஸில் அளிக்கப்பட்ட புகார்; சஷாங் சிங் விளக்கம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஐபிஎல் கிரிக்கெட் நட்சத்திரம் சஷாங் சிங் வீட்டில் சமையல்காரராக வேலை செய்தவர் விபேந்திரா சிங் தோமர் (31). இவர் போபால் காவல் நிலையத்தில் சஷாங் சிங் மீதும், அவரின் தந்தை மீது புகார... மேலும் பார்க்க

சென்னை: ரகசிய கேமராவில் பதிவான காட்சிகள் - மனைவியைக் கொலைசெய்த வழக்கில் இளைஞர் கூறிய `பகீர்' தகவல்!

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார். பின்னர் ரேஷ்மாவும், வெங்கடே... மேலும் பார்க்க