செய்திகள் :

தனுஷ்: `அனைவருக்கும் உரிமை இருக்கிறது; இன்று எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..!'- அமைச்சர் கருத்து

post image

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 சதவிகித நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் அனைத்தையும் முடித்துள்ளோம். கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறை இரும்புக்கரம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள், மாணவர்கள் இல்லாத வீடு இல்லை. பெற்றோர்களும் குழந்தைகளை பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க கடுமையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வார வாரம் கோவைக்கு வரும் பொழுது எல்லாம் அதிகாரிகள் அனைவரிடமும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசித்து வருகிறோம். காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முறையான விசாரணை நடைபெறும். எந்த தொய்வும் கிடையாது. முறையான விசாரணைக்கு பிறகு வெளிப்படையாக பேச முடியும். காவல்துறை தனது கடமையை பொறுப்பாக செய்து கொண்டு இருக்கிறது. கோவை மாணவர் கொலை வழக்கு குறித்து திங்கட்கிழமை சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்படும்.

சம்பத் குமார்
சம்பத் குமார்

கோவை மெட்ரோ திட்டம் கடந்த முறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் முறையாக ஆராய்ந்து, புதிய திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவைக்கு மெட்ரோ அவசியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். கோவை கிரிக்கெட் மைதானம் குறித்து  விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த இடம் சரியாக வரவில்லை எனில் வேறு பகுதிக்கு கொண்டு செல்வோம்” என்றார்.

கோவை மாவட்டத்தில் ரசிகர் மன்றத்தை நடிகர் தனுஷ் பலப்படுத்துவது குறித்த கேள்விக்கு, “இது ஜனநாயக நாடு. கட்சி ஆரம்பிக்கவும், மக்களை சந்தித்து ஆட்சி அமைக்க கேட்கக்கூடிய உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது. அவர்கள் அவரது பணியை செய்கிறார்கள். யார் தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என மாண்புமிகு மக்கள்தான் முடிவு செய்வார்கள். இன்று மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டுக்கிறது” என பதிலளித்தார்.

‘ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய தவறான கணக்கு!’ - ஈரான்

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினம் தினம், 'போர் தீவிரமடைகிறது...', 'ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறார்கள்', 'விரைவில் போர் முடிந்துவிடும்' என்று ஒவ்வொன்றைக... மேலும் பார்க்க

தேனி: சுகாதாரமற்ற கழிவறைகள்; முகம் சுளிக்கும் பயணிகள்... புதிய பேருந்து நிலைய அவலம்!

தேனி புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதியின்றி பொதுக்கழிப்பிடங்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையமாக ... மேலும் பார்க்க

``எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டுவரும் எம்.எல்.ஏ-க்கள் தினம் தினம் அதிரிபுதிரி கிளப்பிக்கொண்டிருக்க... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினரும் சி.வி... மேலும் பார்க்க

'தீட்டுப்பட்டுவிட்டது' - கார்கேவிற்கு நடந்த சம்பவம்; சத்தியாகிரகத்தை அறிவித்த மாணிக்கம் தாகூர்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் பகிர்ந்திருந்தார் மாநிலங்கலவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ப... மேலும் பார்க்க

"6 மாதங்கள் விஜய்க்காக வேலை பார்த்திருக்கிறேன்; ஆனால்..." - குதிரை பேர வழக்கில் கைதான திருநாவுக்கரசு

தவெக கட்சியின் எம்எல்ஏ என்.இளையராஜாவிடம், ஐபிடிஎஸ் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த திருநாவுக்கரசு தொலைபேசியில் தொடர்புகொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து எம்... மேலும் பார்க்க

'அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்'- வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை

"அதிமுக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றாலும், வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க... மேலும் பார்க்க