செய்திகள் :

"6 மாதங்கள் விஜய்க்காக வேலை பார்த்திருக்கிறேன்; ஆனால்..." - குதிரை பேர வழக்கில் கைதான திருநாவுக்கரசு

post image

தவெக கட்சியின் எம்எல்ஏ என்.இளையராஜாவிடம், ஐபிடிஎஸ் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த திருநாவுக்கரசு தொலைபேசியில் தொடர்புகொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து எம்எல்ஏ இளையராஜா, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தவெக எம்எல்ஏ என்.இளையராஜா
தவெக எம்எல்ஏ என்.இளையராஜா

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, திருநாவுக்கரசு தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

அந்த வகையில் கையெழுத்திட்ட பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருநாவுக்கரசு, "மிகவும் சங்கடமாக இருக்கிறது. நான் ஜான் ஆரோக்கியசாமியிடம் எவ்வளவு முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன், விஜய்யிடம் எவ்வளவு முறை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறேன், ஆதவ் ஆர்ஜுனாவிடம் எவ்வளவு முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்வதற்கான காலம் இருக்கிறது.

கட்டாயம் பேசுவேன். ஆறு மாதங்கள் விஜய்க்காக நான் வேலை பார்த்திருக்கிறேன். விஜய்யை முதலமைச்சர் என்று சொன்னதே நான்தான். நிறைய உண்மைகள் இருக்கின்றன. அதற்கு முன் யாரும் கற்பனைக் கதைகளை எழுத வேண்டாம்.

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

இந்த வழக்கு தள்ளுபடி ஆகும்போது நிச்சயம் பேசுவேன். எனக்கு ஏற்பட்ட அநீதிகளை மக்களிடம் கொண்டு செல்வேன். மன வலி இருக்கிறது. இரண்டு மாதம் காத்திருங்கள் பல உண்மைகளைச் சொல்கிறேன்" என்று ஆதங்கமாகப் பேசியிருக்கிறார்.

``எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டுவரும் எம்.எல்.ஏ-க்கள் தினம் தினம் அதிரிபுதிரி கிளப்பிக்கொண்டிருக்க... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினரும் சி.வி... மேலும் பார்க்க

'தீட்டுப்பட்டுவிட்டது' - கார்கேவிற்கு நடந்த சம்பவம்; சத்தியாகிரகத்தை அறிவித்த மாணிக்கம் தாகூர்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் பகிர்ந்திருந்தார் மாநிலங்கலவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ப... மேலும் பார்க்க

தனுஷ்: `அனைவருக்கும் உரிமை இருக்கிறது; இன்று எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..!'- அமைச்சர் கருத்து

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவிகிதம் முடி... மேலும் பார்க்க

'அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்'- வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை

"அதிமுக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றாலும், வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க... மேலும் பார்க்க

''என்னிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே சொத்து வரியை மாற்றிவிட்டார்கள்'' - மேயர் பிரியா கடும் தாக்கு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதாக மக்கள் கொந்தளிக்கின்றனர். இது சம்பந்தமாக விளக்கம் அளித்திருக்கும் சென்னை மாநகராட்சி, ''சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது என்க... மேலும் பார்க்க

ஈரோடு: எரிசாராய ஆலை அனுமதிக்கு எதிர்ப்பு; மேளதாளத்துடன் சீர்வரிசையில் புகார் மனு! | Photo Album

ஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எர... மேலும் பார்க்க