செய்திகள் :

`தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் ஸ்டாலின்; இனியாவது திருந்துங்கள்' - நிர்மல் குமார்

post image

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்கு பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே திருநாவுக்கரசு இளையராஜாவைத் தொடர்புகொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த 40 நாட்களாக தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிர்மல் குமார், "தவெக எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசுகின்றனர். தவெக ஆட்சியை கவிழ்க்க கடந்த 40 நாட்களாக முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமியும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி போன்ற ஆட்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்எல்ஏக்களைத் தொடர்புகொண்டு பல கோடிகளைத் தருவதாகப் பேசுகின்றனர்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

இன்று ஒரு எம்எல்ஏவின் புகாரின் அடிப்படையில் தான் காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனால்தான் மு.க ஸ்டாலின் 30 நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்கிறார். மு.க ஸ்டாலின் தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த கெடுதலுக்காக மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிடுங்கள். முதல்வராக இருந்தவர் இதற்கு முன் தோற்றிருக்கிறாரா? இது மக்கள் உங்களுக்கு கொடுத்த பாடம். இதற்கு மேலாவது திருந்துங்கள்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

`மூன்று முக்கிய முடிவுகள்' - தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? - மாணிக்கம் தாகூர் விளக்கம்

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை. 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய... மேலும் பார்க்க

புதுக்கோட்டை டு நுங்கம்பாக்கம்: திருப்பரங்குன்றம் Files-ஐ துரத்தும் `மேலிட உத்தரவு'- என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் Filesஊடகவியலாளர் ‘அறக்கலகம்’ தவம் மற்றும் தமிழ்தாசன் இணைந்து தயாரித்து இயக்கிய ஆவணப்படம் 'திருப்பரங்குன்றம் Files'. திருப்பரங்குன்றம் மலை, முருகன் கோயில், தர்கா என ஆவணத்தில் இருக்கும... மேலும் பார்க்க

மேகதாது பிரச்னை: ஏன் புதிய நடுவர் மன்றம் வேண்டாம்? - அமைத்தால் என்ன பிரச்னை? | ஓர் அலசல்

கடந்த ஜூன் 19-ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், `1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டத்தின்படி, புதிய நடு... மேலும் பார்க்க

`நீங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம்' - இபிஎஸ்-ஸுக்கு வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கடிதம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி தங்களுக்கு வேண்டாம் என்று எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 9 பேர் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அதில், `2026-ல் நடந்... மேலும் பார்க்க

`அந்தப் பதவிக்கு சம்பளம் 10,000 ரூபாய்.!' - முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேட்டி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது தமிழக அரசியல் களத்தில் சலசலப்புகளை உண்டாக்கி விட்டிருக்கிறது.திமுக, அதிமுக ஆகிய எதிர்க் கட்சிகளுடன் தவெக ... மேலும் பார்க்க

`தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகள் லாபம்தான் அரசுக்கு முக்கியமா?'- சீமான் சாடல்

`அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.இது தொடர்பாக அவர் வெள... மேலும் பார்க்க