செய்திகள் :

'தவெக-வில் இணைகிறீர்களா?' - மனம் திறந்த செங்கோட்டையன்

post image

அதிமுக-வில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர் செங்கோட்டையன். அதிமுக வரலாற்றில் அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சுற்றுப்பயணம் வகுத்து கொடுத்தவர், அமைச்சர் என்று பல முக்கிய பொறுப்புகளை கொண்டிருந்தார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

ஆனால் இது எல்லாம் கடந்த காலம். அண்மை காலமாக செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் பனிப்போர் நிலவி வருகிறது.

இதில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் அதிரடி முடிவு எடுப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் செங்கோட்டையன் நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் தவெக வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்பு செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளேன். அப்படி இயக்கத்திற்காக உழைத்த என்னை உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்று நீக்கியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

செங்கோட்டையன்

இந்த மன வேதனை உங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும். அதை மீறி வேறு எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை.” என்று கூறி சென்றார்.

`விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக-வில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது.ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிசாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர... மேலும் பார்க்க

`அதிமுக - தேமுதிக; வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணியா?' - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங... மேலும் பார்க்க

`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்

தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்... மேலும் பார்க்க

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க மு... மேலும் பார்க்க