செய்திகள் :

”தவெக-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” - குற்றம் சாட்டும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்

post image

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “சிங்கப்பெண் படையில் உள்ள பெண் காவலர்களின் நகைகளே திருடப்பட்டுள்ளன. அந்தப் படையில் உள்ள காவலர்களே பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.

சிங்கப்பெண் படை என்பது வெறும் பெயரளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக புகார் அளிக்க பல்வேறு அவசர உதவி எண்கள் உள்ளன.

கீதாஜீவன்
கீதாஜீவன்

அந்த உதவி எண்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள பெண் காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால்தான் நன்றாக இருக்கும். தற்போது கண் துடைப்பிற்காக மட்டுமே இந்தச் சிங்கப்பெண் படை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சீண்டல்களை இந்த த.வெ.க அரசு மறைக்கிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் த.வெ.கவைச் சேர்ந்த இளம்பெண்ணை அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடத்தியுள்ளார். அந்தச் சம்பவத்தில் பஞ்சாயத்து செய்த ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ சரவணனை முதல்வர் விஜய் அழைத்து கண்டித்தாரா?

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணையே கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். புகார் அளித்த அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுகின்றனர். சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் தமிழகத்திலுள்ள பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது முதல்வர் விஜய்க்கு தேர்தலுக்கு முன்பு தெரியாதா?

கீதாஜீவன்

தேர்தலுக்கு முன்பு நடந்த பிரசாரத்தின் போது, 'தமிழகத்தின் நிதி நிலைமையைச் சீராக்கிட நாங்கள் பல ரகசிய திட்டங்கள் வைத்துள்ளோம். சொன்ன திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனச் சொன்னார்களே. அந்த ரகசியத் திட்டங்கள் என்னென்ன? மக்கள் எந்தக் கேள்வியையும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டதுதான் அந்த வெற்று அறிக்கை” எனக் கூறியுள்ளார்.    

`மேகதாது அணை, தமிழ்நாடு கடன், சாதிவாரி கணக்கெடுப்பு, கனிமவளம்.!' - அர்லேகர் உரையின் ஹைலைட்ஸ்!

தவெக ஆட்சி பொறுப்பேற்றதும் கூடும் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. வழக்கப்படி, ஆளுநரின் உரையுடன் தான் முதல் கூட்டத்தொடர் தொடங்கும். இன்று கூட்டத்தொடர் ஆளுநர் அர்லேகரின் உரையுடன் தான் தொடங்... மேலும் பார்க்க

அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? | மணிவண்ணன் திருமலை

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஅமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்த மூன்று மாதப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. கடந்த ஒரு மாதமாக நட... மேலும் பார்க்க

அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் - இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்களா?

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியில் எம்.பி.க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் தங்களை ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கக் கோரி நேற்று மக்களவ... மேலும் பார்க்க

தாக்கரே கட்சியில் `பிளவு 2.0' தனிஅணியாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் உத்தவ் கட்சி எம்.பி.க்கள் மனு!

மகாராஷ்டிரா சிவசேனாவில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பிளவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தனி கட்சி மற்றும் தனி சின்னத்துடன் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் தற்போது சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை தன் வசம் வைத்த... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்தில் `ப்ரோ', `அங்கிள்' என்று பேசிய விஜய் எங்கே? - நயினார் நாகேந்திரன் காட்டம்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவ... மேலும் பார்க்க

'நோ' அணுசக்தி டு ஃப்ரீ ஆகும் ஈரான் சொத்துகள்: அமெரிக்கா, ஈரான் MoU-ன் 14 புள்ளிகள்? | Simplified

நேற்று (ஜூன் 17) ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 புள்ளிகளாக அமெரிக்கா வெளியிட்டுள்ளவை... (புள்ளிகள் எளிமையாக்கப்... மேலும் பார்க்க