செய்திகள் :

"திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது" - டிடிவி தினகரன்

post image

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில், வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்து விடலாம்.

இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். இது, விவசாயிகளின் கோரிக்கை, தி.மு.க-வின் கோரிக்கை அல்ல. அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கும், கோவைக்கும் வருவதற்கு அனுமதி தராமல் இருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதைப் போல தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனச் சிலர் சிரிப்பாகக் கூறுவது கண்டனத்துக்குரியது.

நம் நாட்டில் 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். அது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியாக இருக்கும். போதைப்பொருள் பழக்கவழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது, கொலைகள், கொள்ளைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், துரிதமாகச் செயல்பட்டு தடுக்கவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்வதுதான் நாகரிகமாக இருக்கும். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளோம். அதற்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க-வினருக்கு த.வெ.க என்றால் ஒரு உறுத்தலாக இருக்கிறது என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். இந்த முறை அ.ம.மு.க பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

SIR: "ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம்" - செல்லூர் ராஜூ ஆதங்கம்

SIR பணியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி நி... மேலும் பார்க்க

`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை

திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் த... மேலும் பார்க்க

``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?" - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம... மேலும் பார்க்க

"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம்.... மேலும் பார்க்க

டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுப... மேலும் பார்க்க

"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, "த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்... மேலும் பார்க்க