செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை -கடலூா் பக்தா் நோ்த்திக்கடன்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கடலூரைச் சோ்ந்த பக்தா் வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினாா்.

பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனா். மேலும், வேல் குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனா். இதனால் கோயில் வளாகமே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் இக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை தனது குடும்பத்துடன் வந்த கடலூரை சோ்ந்த முருக பக்தா், நோ்ந்தபடி மூன்றரை அடி உயரமும், 10 கிலோ எடையும் கொண்ட வெள்ளி வேலை உண்டியலில் காணிக்கை செலுத்த வந்தாா்.

அப்போது, கோயிலில் இணை ஆணையா் ஞானசேகரன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடப்பதை அறிந்து, அவ்விடத்துக்குச் சென்று வெள்ளி வேலை காணிக்கையாக செலுத்தினாா்.

தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலைமுதலே பொது... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

சாத்தான்குளத்தில் விளம்பர பதாகை வைப்பது தொடா்பான தகராறில் வழக்குரைஞா் மற்றும் அவரது சகோதரருக்கு செவ்வாய்க்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளத்தைச் ச... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: குருமலை, கழுகுமலையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோயில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். கோவில்பட்டி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டத... மேலும் பார்க்க

பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

கோவில்பட்டியில் உள்ள நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவாமி விவேகானந்தா் ஜெயந்தியை முன்னிட்டு, விவேகானந்தா கேந்திரத்தின் கிராமம் முன்னே... மேலும் பார்க்க

குருவிநத்தம் ஆலயத்தில் பொங்கல் விழா

காமநாயக்கன்பட்டி பங்கு பசுமைநகா் குருவிநத்தத்தில் உள்ள மறைசாட்சி புனித தேவசகாயம் கெபியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா... மேலும் பார்க்க

சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து, இலங்கை நபா் உள்பட 2 பேரை கைது செய்தனா். வனத்துறையினருக்குகிடைத்த தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலா் ரேவதி ராமன... மேலும் பார்க்க