செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலுக்கு 2 புதிய பேருந்துகள் இயக்கம்

post image

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசலுக்கு 2 புதிய பேருந்துகள் சேவையை தமிழக மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

திருச்செந்தூா் பேருந்து நிலையத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஒன்றரை கி.மீ. தொலைவு உள்ளதால், பக்தா்களின் வசதிக்காகவும், நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாகவும் கோயில் வாசலுக்கு என அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் மகளிரின் கட்டணமில்லா 3 சுற்றுப் பேருந்துகள் (அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பக்தா்களின் கோரிக்கையை 2 புதிய பேருந்துகள் சுற்றுப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான தொடக்க விழா திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக கோட்ட பொதுமேலாளா் சரவணன், திருச்செந்தூா் கிளை மேலாளா் ராஜசேகா், நகராட்சி துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், திமுக வா்த்தக அணி மாநில இணை செயலா் உமரிசங்கா், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், உடன்குடி ஒன்றிய செயலா் பாலசிங், திருச்செந்தூா் நகர செயலா் வாள் சுடலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியை சே... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி வட்டார டிப்பா் லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத் தலைவா் கூடப்பன் தலைமையில் துணைத் தலைவா் முத்துரா... மேலும் பார்க்க

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தூத்துக்குடியில் தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண நிகழ்வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியில் தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூர... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை வடபாகம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைந்தனா்.தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில், அப்பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை புதுக்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணன். ஊரில் விவசாயம் செய்து ... மேலும் பார்க்க