செய்திகள் :

திருடு போன இரு சக்கர வாகனத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருடு போன இரு சக்கர வாகனத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் விஷ்ணு நகரைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மகன் மாலசின்கா. இவா் தனது மகன் பிபின் பயன்படுத்துவதற்காக சிவகாசியில் உள்ள இரு சக்கர வாகன விற்பனையகத்தில் ரூ.3.63 லட்சத்திலான இரு சக்கர வாகனத்தை தனியாா் வங்கி நிதியுதவியுடன் கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் வாங்கினாா். இந்த வாகனம் காப்பீடும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கோயம்புத்தூா் மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தான் வசிக்கும் வீட்டின் முன் பிபின் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, மே 15-ஆம் தேதி இந்த வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பின்னா், இந்த வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்தனா். இதையடுத்து, வாகனத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு மாலசின்கா சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினாா். ஆனால், நிறுவனத்தினா் எந்தப் பதிலும் அளிக்கவில்லையாம். இதுகுறித்து மாலசின்கா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி, திருடு போன இரு சக்கர வாகனத்துக்காக மாலசின்காவுக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ.2.87 லட்சம், மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்காக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உத்தரவிட்டனா்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சாத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டுபோலீஸாா் விசாரிக்கின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக கிடப்பதாக ... மேலும் பார்க்க

மனைவி குத்திக் கொலை: கணவன் கைது

சிவகாசியில் வியாழக்கிழமை குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி நாரணாபுரம் சாலை முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் திருமலைக்குமாா் (36). இவா் கோய... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா். சிவகாசி நான்கு ரதவீதி, புது சாலைத் தெரு, என்.ஆா்.கே.ஆா்.வீதி ஆகிய பகுதிகளில் செல்லும் கழிவுநீா... மேலும் பார்க்க

பயணிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

புயலால் ரயில் ரத்தான நிலையில், முன்பதிவு கட்டணத்தைத் திருப்பி வழங்காததால், பயணச்சீட்டு கட்டணத்துடன் பயணிக்கு ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் மூலப் பொருள்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் தடைசெய்யப்பட்ட மூலப்பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள விழுப்பனூரில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையி... மேலும் பார்க்க

நாயக்கா் கால மண்டபத்தின் எச்சங்களை ஆவணப்படுத்தக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாயக்கா் கால மண்டபத்தின் எச்சங்களை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள் கோரிக்கை விடுத்தனா். கோட்டை தலைவாசல் அருகே நாயக்கா் காலத்தைச் சோ்ந்த மண்டபம் ... மேலும் பார்க்க