செய்திகள் :

``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நடிகை ஜெயா பச்சன்

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கோபப்படுபவர். பத்திரிகையாளர் பர்கா தத்தின் ''வீ தி வுமன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயா பச்சன் பேசும்போது சில தகவல்களை துணிச்சலாக தெரிவித்துள்ளார்.

ஜெயாபச்சனிடம் திருமணம் என்ற ஒன்று காலாவதியாகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, ஜெயா பச்சன் அதனை ஒப்புக்கொண்டார்.

நான் இப்போது பாட்டியாகிவிட்டேன். எனது பேத்தி நவ்யாவுக்கு 28 வயதாகப் போகிறது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று இளம்பெண்களுக்கு அறிவுரை வழங்க எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. சிறு குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். திருமண உறவுகள் வேகமாக மாறிவருகின்றன. திருமண நடைமுறைகள் காலாவதியாகிவிட்டது'' என்று தெரிவித்தார்.

ஜெயா பச்சன்
ஜெயா பச்சன்

உடனே உங்கள் பேத்தி நவ்யா நீங்கள் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ''எனது பேத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பமாட்டேன். இளம் தலைமுறையினர் வாழ்க்கையை அனுபவியுங்கள்!

சட்டப்பூர்வ திருமணம் எந்த ஒரு உறவையும் வரையறுக்கவில்லை'' என்று தெரிவித்தார். திருமணத்தை லட்டோடு ஒப்பிட்டு பேசிய ஜெயா பச்சன், லட்டை சாப்பிட்டால் உங்களது உடம்புக்கு நல்லது கிடையாது. அதேசமயம் சாப்பிடாவிட்டாலும் வருத்தப்படுவீர்கள். அதே போன்றதுதான் திருமணமும்' என்று குறிப்பிட்டார்.

புகைப்பட பத்திரிகையாளர்களை மீண்டும் ஜெயா பச்சன் சாடினார். தனக்கும் புகைப்பட பத்திரிகையாளர்களுக்கும் எந்த வித உறவும் இல்லை. எனது கல்வித்தகுதி குறித்து கேட்கிறார்கள். மோசமான இறுக்கமான ஆடையை அணிந்து கொண்டு கையில் மொபைலுடன் வெளியில் செல்பவர்கள் தங்களது கண்ணில் படுவதை போட்டோ வீடியோ எடுத்து வெளியிடலாம் என்று நினைக்கிறார்கள்'' என்றும் குறிப்பிட்டார்.

ஜெயா பச்சன்
ஜெயா பச்சன்

ஜெயா பச்சன் தனது பேத்தி நவ்யாவின் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்.

தனது கணவர் அமிதாப்பச்சன் குறித்து பேசுகையில்,''எனது கணவர் எதையும் வெளிப்படையாக பேசமாட்டார். தனது கருத்தை தன்னுள் வைத்துக்கொள்வார். தக்க நேரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்துவார். ஆனால் நான் அப்படி கிடையாது. ஆனால் அவர் மிகவும் வித்தியாசமானவர் எனவேதான் அவரை திருமணம் செய்து கொண்டேன். என்னைப் போன்ற ஒருவரை நான் மணந்திருந்தால் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர் பிருந்தாவனத்தில் இருப்பார் நான் வேறு எங்காவது இருப்பேன்!" என்று கூறினார்.

Dharmendra: "இதயம் நொறுங்கிய நிலையில்..." - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு

கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று. தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்... மேலும் பார்க்க

Aamir Khan: ``அதை நினைத்து அப்போது வீட்டிற்கு வந்ததும் அழுவேன்!'' - மனம் திறந்த ஆமிர் கான்

ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. கூடிய விரைவில் அதன் அத... மேலும் பார்க்க

LK7: "அவர் மும்பைக்கும் வரும்போது நரேஷன்" - லோகேஷ் கனகராஜ் உடனான படம் குறித்து ஆமிர் கான்

ஆமிர் கான் நடிப்பில் இந்த ஆண்டு 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கவிருப்பதாகவு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு - தவிர்த்த ஹேமாமாலினி; ஓரங்கட்டினார்களா மகன்கள்?

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக செய்யப்பட்டது. அவரது உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில... மேலும் பார்க்க

"அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்!" - 8 மணி நேர பணி குறித்து துல்கர் & ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்த... மேலும் பார்க்க

`இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி

பா.ஜ.க எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட்டிற்கு சென்று பிரபலம் அடைந்தார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகர் தர்மேந்திராவை அவர் திருமணமும் செய்து க... மேலும் பார்க்க