செய்திகள் :

திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

post image

ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த 2013-ம் ஆண்டு இறந்து போனார். இதையடுத்து பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கார்மேகம்  வேலைக்காக ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் நிலையில், கஸ்தூரிக்கும் பரமக்குடியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கார்மேகம், கஸ்தூரியை கண்டித்துள்ளார். ஆனாலும் கஸ்தூரி - முருகேசன் இடையேயான தொடர்பு தொடர்ந்துள்ளது.

கொலையாளி கார்மேகம்
கொலை நடந்த இடம்

இதனால் கஸ்தூரியை தான் வேலை பார்க்கும் ராமேஸ்வரம் ஆய்வு மாளிகைக்கு இன்று வரவழைத்துள்ளார் கார்மேகம். அங்கு வந்த கஸ்தூரியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு, கொலை செய்த கத்தியுடன் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் கார்மேகம்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த கார்மேகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை குறித்து ஏ.எஸ்.பி மீரா விசாரணை

ராமேஸ்வரம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. மண்டபம் முகாமில் அகதிகள் இருவருக்கு இடையே மது போதையில் எழுந்த தகராறில் கவிராஜ் என்பவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாள் ராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, ஒரு தலை காதலால் முனியராஜ் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து  மறுநாள் பாம்பனில் தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் சமையல் மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று வரம்பு மீறிய தொடர்பில் இருந்த பெண் ராமேஸ்வரத்தில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் காவல் சரக பகுதியில் தொடரும் கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கரூர்: வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறிப்பு; திமுக பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார்!

திருச்சி, அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவா (வயது: 33). இவர், குளித்தலை காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் கிளையில் மேலாளராக வேலை பார்த்து வருக... மேலும் பார்க்க

கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும் தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந... மேலும் பார்க்க

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப்... மேலும் பார்க்க

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ - கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனு... மேலும் பார்க்க

வேலூர்: பெண் சிசுவை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது; நல்லடக்கம் செய்த போலீஸ் - நடந்தது என்ன?

வேலூர் அரசு `பென்ட்லேண்ட்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம், பச்சிளம் பெண் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியட... மேலும் பார்க்க

`ரூ.50 லட்சத்துக்கு ஆடம்பர பைக் கேட்டு ரகளை' - மகனை கம்பியால் அடித்துக்கொன்ற தந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வஞ்சியூரைச் சேர்ந்தவர் வினயானந்த் (52). இவரது மகன் ஹிருத்திக்(28). ஹிருத்திக் ஆடம்பர பைக் வேண்டும் பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். தொல்லை தாங்கமுடியாமல் லோன் எடு... மேலும் பார்க்க