செய்திகள் :

திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

post image

ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த 2013-ம் ஆண்டு இறந்து போனார். இதையடுத்து பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கார்மேகம்  வேலைக்காக ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் நிலையில், கஸ்தூரிக்கும் பரமக்குடியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கார்மேகம், கஸ்தூரியை கண்டித்துள்ளார். ஆனாலும் கஸ்தூரி - முருகேசன் இடையேயான தொடர்பு தொடர்ந்துள்ளது.

கொலையாளி கார்மேகம்
கொலை நடந்த இடம்

இதனால் கஸ்தூரியை தான் வேலை பார்க்கும் ராமேஸ்வரம் ஆய்வு மாளிகைக்கு இன்று வரவழைத்துள்ளார் கார்மேகம். அங்கு வந்த கஸ்தூரியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு, கொலை செய்த கத்தியுடன் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் கார்மேகம்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த கார்மேகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை குறித்து ஏ.எஸ்.பி மீரா விசாரணை

ராமேஸ்வரம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. மண்டபம் முகாமில் அகதிகள் இருவருக்கு இடையே மது போதையில் எழுந்த தகராறில் கவிராஜ் என்பவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாள் ராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, ஒரு தலை காதலால் முனியராஜ் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து  மறுநாள் பாம்பனில் தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் சமையல் மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று வரம்பு மீறிய தொடர்பில் இருந்த பெண் ராமேஸ்வரத்தில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் காவல் சரக பகுதியில் தொடரும் கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க