செய்திகள் :

திருவண்ணாமலை: தடையை மீறி தீபமலை மீது ஏறிய பிக்பாஸ் அர்ச்சனா - வைரலான பதிவு; அபராதம் விதித்த வனத்துறை

post image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தீப மலையைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலை உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது ஏறுவதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மலைமீது ஏற வனத்துறைத் தடை விதித்திருக்கிறது.

இந்த நிலையில், சின்னத்திரை சீரியல் நடிகை அர்ச்சனா, நடிகர் அருண்பிரசாத் ஆகியோர் தடையைமீறி மலை உச்சிக்கு சென்று வந்தனர். மேலும், இருவரும் மலை ஏறிச் சென்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு வைரலாகி, அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினரின் கவனத்துக்குச் சென்றது.

நடிகை அர்ச்சனா

இதையடுத்து, தடையை மீறி தீபமலை மீது ஏறிய நடிகை அர்ச்சனா மற்றும் நடிகர் அருண்பிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அலுவலர், வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இருவரையும் அழைத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அர்ச்சனாவும், அருண்பிரசாத்தும் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தனர்.

மேலும், இருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர், `மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது’ என்று எச்சரித்து அனுப்பினர். வனத்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த போட்டோ, வீடியோக்களையும் உடனடியாக நீக்கினார் நடிகை அர்ச்சனா.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க