செய்திகள் :

திருவாரூர்: கீரிப்பிள்ளை கடித்த 7 வயது சிறுவன் - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த சோகம்!

post image

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புது தெருவைச் சேர்ந்த முத்து-தேவி தம்பதியின் மகன் நவீன்(7) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். முத்து வீட்டில் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்துள்ளார் நவீன். வீட்டில் கொடாப்பில் அடைத்திருந்த கோழியை பிடிப்பதற்கு கீரிப்பிள்ளை வந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் நுழைந்த கீரிப்பிள்ளை தூங்கி கொண்டிருந்த நவீன் கையை கடித்து விட்டது. வலி தாங்காமல் அலறிய நவீனை அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுள்ளனர்.

கீரிப்பிள்ளை கடித்த சிறுவன்

அதன் பிறகு வேறு எந்த சிகிச்சையும் நவீனுக்கு பெற்றோர் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நவீனுக்கு காய்ச்சல் அதிகமாக அடிக்க பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு காய்ச்சல் கடுமையாக அதிகரித்த நிலையில், நவீன் உயிரிழந்து விட்டார். மகன் இறப்பை தாங்க முடியாமல் பெற்றோர் கதறியுள்ளனர்.

இது குறித்து சிலரிடம் பேசினோம், ``கீரிப்பிள்ளை கடித்த நவீனை பெற்றோர் முறையாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பு நவீன் உடம்புக்குள் அதிகரித்து கொண்டே இருந்துள்ளது. நேற்று கீரிபிள்ளை என்ன செய்யுமோ அது போல் செய்ததாக சொல்கிறார்கள். காய்ச்சலும் அதிகமாக அடித்து இறந்து விட்டார். நவீன் உடலை உடனடியாக மருத்துவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்க வில்லை. சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது" என்றனர். கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் மூன்று மாதம் கழித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க